பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'டானா' முத்து / 47

சொத்து பத்துடன் பலரும் வந்தே
முத்துவுக்குத் தம்தம் மகள்களைக் கொடுத்துச்
சித்திரைக் குள்ளே திருமணம் முடிக்க
அத்தையிடம் ஏதேதோ ஆசைகள் காட்டினர்!!


தன்னை மனிதனாய் ஆக்கிய மாமா
பெண்ணாம் அன்னம் ஒருத்தியையே
உண்மையில் மணக்க விரும்பு வதாகக்
கண்டிப்பாய் முத்து சொல்லி விட்டான்!

Ni.
“கையொன்று சூம்பிய அன்னத்தை மணக்க
பையா உனக்குப் பைத்தியமா?” என்றனர்!
கையின் ஊனம் காதலுக்கு உண்டா?
வைகாசி யிலேயே திருமணம் நடந்தது!


 
அன்னம் - முத்து தம்பதிகளாகி
பின்வந்த நாளிலும் பெற்றோர் அத்தை
இன்முகம் காட்டவே இல்லறம் நடத்தினர்!
தன்னாலேயே உயர்ந்தான் ‘டானா முத்து’!

♦♦♦