பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60 / வயலூர் சண்முகம்


"ஐயோ, பாவம்!" என்றேதான்
அனுதாபப் பட்டார் மாமாதான்!
“ஐயையே!” என்று முகம் சுளித்தே
அருவருப் படைந்தாள் கோதைதான்!

கையும் காலும் உதைத்திழுத்தே
கண்ணில் மூக்கில் அடிபட்டே
பையன் வேலு கிடந்தாலும்
பரிகாசம் செய்வான் நாதன்தான்!

துடியாய்த் துடிப்பாள் நங்கைதான்!
தூக்கப் போவாள் வேலுவையே!
அடியாய் அடித்தே தன்மகளை
அதட்டி விரட்டுவாள் கோதைதான்!

******