பக்கம்:டானா முத்து-சிறுவர் கதைப்பாடல்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எழுதியிருந்தார். அதில் “தமிழுக்கும், தமிழருக்கும், தமிழகத்துக்கும் தாங்கள் ஏதாவது செய்திட வேண்டுகிறேன். தங்கள் எழுத்தாற்றல் கொண்டு!" என்று குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதம் இப்போது என் நினைவுக்கு வருகிறது.

எதிர்கால தமிழகத்தின் சிற்பிகளான இன்றைய தமிழ்க் குழந்தைகளுக்கு இந்த நூல் மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.

அன்றே, முத்துமுத்துக் கையெழுத்தால் இந்நூலை படிஎடுத்து வைத்திருந்த என் சகோதரி மாலாவுக்கும் உள் ஒவியங்கள் வரைந்து தந்த தம்பி திருவையாறு குருபாலாவுக்கும், என் தந்தையாரின் நூல்களைத் தொடர்ந்து செம்மையாக வெளியிடும் நண்பர் 'நிவேதிதா புத்தக பூங்கா’ பதிப்பாளர் எஸ்.ஆர். சுவாமிநாதனுக்கும் என்றும் எனது அன்பின் நன்றிகள்.

நேசமிக்க
எஸ்.ராஜகுமாரன்


புதிய எண் : 14, சிவாஜி தெரு,

தி.நகர், சென்னை - 600 017.

செல்பேசி : 9840124602