பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தஞ்சைச் சிறுகதைகள்

285


மனசும் ஓடம்பும் ஒட்டாம அலைக்கழிச்சா அவள் தான் என்ன செய்ய முடியும்?

'...பட்ட இம்சை எல்லாம் எட்டாச்சு. இன்னும் ஏன் கெடந்து லோலுபடனும்?' மவளை எழுப்பி வேலையப் பாக்கச் சொல்லலாங்கிற எண்ணத்தோட, "தங்கம்! தங்கம்!"ன்னு குரல் கொடுத்தவள் சட்டுன்னு நிறுத்திக் கொண்டாள் பாக்கியம்.

இந்தப் பொண்ண வாழ வைக்கத்தானே பத்து வருஷமா இந்தப் பாடுபட்டுக்கிட்டு இருக்கிறோம். எல்லாம் கஷ்டமும் நம்மத் தலையோடயே போவட்டும். ஊரைப் போல பொண்ணப் பெத்தவன் கிட்டக்க இருந்தா நல்லது. கெட்டது செய்யப் போறான்? வயித்தக்கட்டி வாயக்கட்டி வாங்கி வைச்சிருந்த நன்னி புண்ணியயும் சுருக்கு பையில வைச்சிருந்த பணத்தையும் ராத்திரியோட ராத்திரியா தூக்கிட்டு ஓடிப்போன, மனுசனா திரும்ப வந்து நல்லது கெட்டது செய்யப் போறான்?

பாழும் கெணத்தில் தள்ளி விட்டுட்ட பெத்த ஆயாவும், அப்பனும் போய் சேந்தாச்சி. இப்ப என்னா நடக்குதுன்னா கண்ண முழுச்சி முழுச்சிப் பாக்கிறாங்க? ஆயி, அப்பன் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது பாக்கியத்துக்கு.

ஆயி, அப்பன் இல்ல. மாமன் வீட்டுல வளர்ந்த புள்ள. சம்பாதிச்சதெல்லாம் கண்டபடி செலவு பண்ணிப்புட்டு இப்ப வெறும் ஆளா நிக்குது. இருந்தாலும், நாம் அந்தத் தம்பிக்கே பாக்கியத்த கட்டிவச்சா அவ அங்க போயி எட்டு சித்திரம் பண்ணிப்புடுவா. ஏங்கதாங்கலுக்கு நாமும் கையில கெடைக்கிறத செஞ்சா பெரிசா வாழ்ந்துடுங்க. பாக்கியத்தோட ஆயா, அப்பன்காரன் கிட்ட சொல்லி தான், வேலுசாமிக்கு பாக்கியத்த கட்டிவச்சதுங்க.

அப்பயெல்லாம் வேலுசாமியும், பாக்யம் கிழிச்சக் கோட்டத் தாண்டாமத்தான் இருந்தான். தான் குடும்பம் உண்டுண்ணும் தான் வேல உண்டுண்ணும், சம்பாத்தியத்தில்' ஏதோ டீக்கும், பீடிக்கும் எடுத்துக்கிட்டு மீதியெல்லாத்தியும் கொண்டாந்து பொண்டாட்டிக் கையிலக் கொடுத்திட்டு ஒரு வம்பு தும்புக்கு போவாம இருந்தவன் தான்.

ஈட்டுக்கும், பாட்டுக்கும் போக மீதப்பட்டத் சிறுவ சிறுவ சேத்து வச்சு வீடாக்கி, ஆடு மாடாக்கி, நன்னி. புன்னியாக்கி.... சந்தோஷமாத்தான், ஏப்பர் பொண்டாட்டிய உட்டு ஒரு நாழி பிரிஞ்சி இருக்கமாட்டான். அந்த மகசூல்ல நெல்ல வித்து பணத்தக் கொண்டாந்து கொடுத்தவன், "இந்தா பாரு! வர்ற போகத்துக்கு ரெண்டு ‘மா' குறு நெலத்த வாரத்துக்குப் புடுச்சுப் புடுவோம்." புருஷன் சொன்னப்ப அப்புடியே நெகிழ்ந்துதான் கிடந்தாள் பாக்கியம்.