பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சாருநிவேதிதா

க்ஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்’ என்ற நாவல் மூலம் இலக்கியத்தில் கலகக்குரல் எழுப்பிய சாருநிவேதிதா கீழ்த்தஞ்சைக்காரர்.

‘எண்பதுகளின் பிற்பகுதியில் சாருநிவேதிதா, சில்வியா போன்றோர் அறிமுகப்பட்டு, விமர்சகர்களின் புறக்கணிப்புக்கும் இளைய தலைமுறையினரின் வரவேற்புக்கும் ஆளாயினர்’... புதிய இலக்கியப் போக்கு பற்றிக் குறிப்பிடுகிறார். (தளம் 1990 ஆகஸ்ட்) அ.மார்க்ஸ்.

‘...மனிதர்களின் செக்ஸ் வக்கரங்களையும், ஓடுகாலித்தனத்தையும் சித்தரிப்பது தான் தத்துவங்களுக்கும், அறவியலுக்கும் எதிரான கலகம் என்று சாருநிவேதிதா கருதுகிறார் போலும். இது மிக ஆபத்தானது. நவநவீனக் கோட்பாட்டை இலக்கிய நாசகாரப் போக்கு, இலக்கிய வெறுமைப் போக்கு என்று கூறலாம்’... என்று மார்க்ஸிய விமர்சகர், தி.க.சி. குறிப்பிடுகிறார்.

‘சாரு நிவேதிதா தன் கதைக்களங்களை மிகவும் நேர்த்தியாகப் பயன்படுத்தும் ஆற்றல் படைத்தவர். சொல்ல வேண்டியதை முழுமையாகவும், சிக்கனமாகவும் கூறவல்லவர். அவருடைய உரையாடல் பதிவு சிறப்பாகவே இருக்கும். (நேநோ சிறுகதைத் தொகுதியில் அசோகமித்திரன்) இவருடைய நோக்கில் நானும் உடன்படுகிறேன். ஆனால் அதே சமயத்தில்....

அடுப்பெரிக்க முடியாத பெரியக்கட்டையை உடைத்து அடுப்பெரிக்க பயன்படுத்தினால் சரி. அதை அப்படியே சிதைத்து மண்ணோடு மண்ணாக்கிவிட்டால்....

வாழ்க்கையைக் கட்டு உடைத்து எளிய மனிதனுக்காக குரல் கொடுக்கும்போது இலக்கை ஏற்றுக் கொள்ள முடிகிறது. மனிதநேயத்தை சிதைப்பு செய்யும்போது அந்த இசம் நாசகாரப் போக்குக்கு உட்படுத்திக் கொள்கிறது.

இந்த நவநவீனத்துவமே பெண்ணியத்தின் தலித்தியத்தின் உச்சக்குரல் என்ற கோஷத்தை வைத்துவிட்டு இந்த இசம் வார்த்த ‘ஸிரோடிகிரி; நாவலையும், நேநோ’ சிறுகதைத் தொகுதியும் முன் வைத்து பார்த்தால்... தலித்தியத்திற்கும் பெண்ணியத்திற்கும் எதிராகவே உள்ளதை மறுப்பதற்கு இடமில்லை.