பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. விச்வநாதன்

ஞ்சை மாவட்டம் காவிரிக்கரை ஓரத்தில் உள்ள அரசூரில் 1948 இல் பிறந்த விஸ்வநாதன் தொடக்கக் காலத்தில் நவீன கவிதை மூலம் பரவலாய் அறியப்பட்டவர். அண்மைக்காலத்தில் சிறுகதைத்துறையிலும் தன் முத்திரையை பதித்துக் கொண்டிருப்பவர்.

தனது படைப்பு எந்த இதழிலும் வரலாம். தன் குறிப்புமொழியில் தன் முகத்தோடு மட்டுமே தன் படைப்புகள் வடிவம் கொள்ளும் என்பதை நிலைநாட்டிக் கொண்டிருப்பவர்.

வாழ்வின் மென்மையான உணர்வுகளை படைப்பாக்குவதில் தேர்ச்சிப் பெற்றவர்.

இரண்டு கவிதைத் தொகுதி நூல் வடிவம் கொண்டுள்ளன.

அவரது சிறுகதைகளைப் படிக்கும் போது அவர் எதிர்காலத்தில் சாதிப்பார் என்பதை உணரமுடிகிறது.