பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0.111. விஞ்ஞானம் அல்லது கணிதம் கற்கின்றவர்கள். வைத்து. இருக்கும் நூல்களை எடுத்துப் புரட்டிப் பார்த்தால் உண்மை விளங்கும். நம் போன்றவர்கட்கு அந்நூல்கள் புரியாத புதிராகவே இருக்கும். அவற்றிலுள்ள எழுத்துக் களும், எண்களும் நாமறிந்தவையே. எனினும் அவை கூறும் கருத்துக்கள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கும். ஆனால் அத்துறைகளில் பயின்றவர்கட்கு அந்நூலில், கூறப்பெற்ற கருத்துக்கள் அங்கை நெல்லிக்கனியாக, விளங்கும். அதுபோலத் திருமந்திரத்தின் பெரும் பகுதி என்போன்ற சிற்றறிவினர்க்கு உரியனவல்ல போலும் என்று நினைத்து மன அமைதி அடைவதுண்டு. இந்நிலையிற்கூட ஒர் உண்மையை மறவாமற். காண்டல் வேண்டும். திருவாளர் அருணாசலம் பிள்ளை அவர்கள் விட்ட வினா மிக இன்றியமையாத ஒன்றாகும். 'திருமந்திரம் போன்றநூல்கட்கு, இற்றை நாளில் கிடைத்: துள்ள இடம் யாது?’ என்பதே அவருடைய வினா. எத்துணைதான் பதி, பசு பாச ஆராய்ச்சியில் ஈடுபட். டாலும் அவ்வாராய்ச்சி காலத்தோடு ஒட்டி வராக்கால் ஒரு சிலருக்கே பயன்படுவதாக முடிந்துவிடும். உண்மை யைக் கூறவேண்டுமானால் நம் நாட்டில் இற்றைநாளில்: சமயங்கள், அவைபற்றிய பிரச்சாரம் என்பவை எந்நிலை யில் உள்ளன? சைவம் என்றால் என்ன என்பதை அறியாத' வர்களிடமன்றோ நம் சமயத்தைச் சென்று பரப்ப வேண்டும்? அதன் எதிராக அதுபற்றி அறிந்தவர்கள், அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர் இவர்களிடையே சென்று சைவத்தின் மேற்சமயம் வேறில்லை என்று. கூவுவதன் நோக்கம் யாது? ... . . * -