பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 118 நூல்களைப்பற்றிப் பேசிக் கொண்டு வந்த முறையை, அதாவது நமக்குள் நாமே கூட்டம் போட்டு முன்னரே அதுபற்றித் தெரிந்தவர்களிடம் திரும்பத் திரும்ப அதையே பேசுதல் போன்ற முறையை மாற்றிக்கொண்டால் ஒழிய விரைவில் இந்நூல்கள் புதை பொருள்களாக மாறி நூல் நிலையங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் நிலை ஏற்பட்டு விடும். எவ்வளவு உயர்ந்த நூல்களானால்தான் என்ன? அவற்றைப் போற்றிக் கற்பார் இன்றேல் அவை மறைந்து போதல் இயல்புதானே! சமுதாய நோக்கு வேண்டும் : ஓயாமல் மாணவர்களோடு பழகுகின்ற என் போன்ற வர்கள் மனத்தில் தோன்றுகிற அச்சமாகும் இது. இன்றைய மாணவர் சமுதாயம் இந்நூல்களை அறியாமல் வளர்கின்றது. நாளை இவர்கள் பெரியவர்களாகும் பொழுது என்ன ஆகும்? பொதுமக்களோடு அதிலும் சிறப்பாக இளைஞர்களோடு பழகி அவர்களை நம் நெறிக்கு இழுக்காவிடின் என்ன நேரும் என்றும் சிந்தித்த துண்டா? நாம் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு இந்த அருள் நூல்களைப் படித்தால் நாம் மட்டும் பயனடைவோமே தவிரச் சமுதாயத்திற்கு நம் கடமையை நிறைவேற்றியவர்களாக ஆவோமா? நம் முன்னோர்கள், அதிலும் குறிப்பாக இவ்வருள் நூல்களை ஆக்கித்தந்த பெரியார்கள் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்பதையாவது சிந்தித்தோமா? திரு மந்திரமாகிய பெருநூலை ஆக்கித்தந்த பெருமகன் எங்கோ இருந்து இறைவனில் ஈடுபட்டிருக்க வேண்டியவர் ஏன் இங்கு வந்தார்? இறந்துபோதல் என்பது இவ்வுலகின் இயல்பு என்று அவருக்குத் தெரியாதா? ஏன் இறந்தவன் உடம்பில் அவர் புகவேண்டும்? பின்னர் என் இத்துணைப் பாடல்களை ஆக்கவேண்டும். நம்மிடம் கொண்ட த.ப.-8