பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ைஅ. ச. ஞானசம்பந்தன் கருனையினால்தான் இவற்றைச் செய்தார் என்று கூறத் - தேவை இல்லை. திருமூலர் போன்ற நம் முன்னோர்கள் நம்மாட்டுக் காட்டிய கருணையை அவரின் பின்வந்தோராகிய நாம் கடைப்பிடிக்கிறோமா? திருமூலர் அளவிற்கு நாம் செல்லா விடினும் இன்றைய சமுதாயத்திற்கு எது தேவை என்பதை அறிந்து அதையாவது பூர்த்தி செய்ய முயல் கிறோமா? எந்த அளவாவது நாம் நம் சமுதாயத்திற்கு பயன்பட வேண்டுமென்று நினைக்கிறோமா? சைவர்க ளாகிய நாம் இம்முறையில் சிந்திக்கத் தொடங்கினா லொழிய நம் சமயம். சமயம் நேரும்போது மெல்ல மறைதல் இயல்பு. மனித வாழ்வு முழுவதையும் உற்று நோக்கினால் அதனை 'அக வாழ்வு புறவாழ்வு' என இருவகையதாப் பிரிக்கலாம் என்பது விளங்கும். இங்கு யான் அகவாழ்வு புறவாழ்வு என்று கூறுவது தமிழ் இலக்கியத்தில் கண்ட பிரிவை அன்று. மனிதன் தன் மனத்திலே ஒர் உலகை உண்டாக்கிக் கொண்டு வாழ்வதையே ‘அகவாழ்வு' என்று கூறுகிறேன். மனம், அதனோடு தொடர்புடைய உடல் என்ற இரண்டிற்கும் புறம்பாக உள்ள உலக வாழ்வையே புறவாழ்வு' என்று குறிக்கிறேன். மேலை நாட்டாரைப் பொருத்தமட்டில் புறவாழ்வு (இவ்வுலக வாழ்வில்) வெகுவாக முன்னேறிச் சென்றுள்ளனர். சந்திரனில் சென்று இறங்கும் அளவிற்கு முன்னேறிய அவர்கள் இப்பொழுது அந்த விஞ்ஞான முன்னேற்றத் தால் மட்டும் பயனில்லை என்பதையும் மனிதமனம் எங்குபோனாலும் கூடவே வரும் என்பதையும் அம். மணவாழ்வு செம்மைப்பட்டாலொழிய மனித வாழ்வு. பூரணத்துவம் அடைவதில்லை என்பதையும் கண்டு கொண்டனர். இன்று அவர்கள் அனுபவமூலம் கண்டு. கொண்ட இந்த உண்மையை அவர்கள் சமயத்தை நிறுவிய