பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 இ. அ. ச. ஞானசம்பந்தன் ளாகிய விலங்களும், பயிர்களும்கூட இதற்கு ఫ్రాఇజ్తో கல்ல. பிற உயிர்கள் துன்புற்றால் அதனை நீக்கவேண்டும் என்ற எண்ணம் தம்மாட்டு இருப்பதை பக்தர்களுள் ஒருவராகிய இராமலிங்க வள்ளலார் இதோ கூறுகிறார். எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணிநல் இன்புறச் செயவும் அவ்வுயிர்களுக்கு வரும் இடை யூற்றை அகற்றியே அச்சம் நீக்கிடவும் * * * * * * * * * இச்சைதான் எந்தாய்' -பிள்ளைச்சிறு. 18 மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன்' - பிள்ளைச்சிறு. 2. 'எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் штешff?”. 米 崇 議 'அப்பா! நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டுப் ஆருயிர்கட்கு எல்லாம், நான் அன்புசெயல் வேண்டும்' 来 来 坐 "... ... ... உளம் வருந்திய பிறர்தம் கண்ணினிர் விடக்கண்டு ஐயவோ நானும் கண்ணினிர் விட்டுளம் கவன்றேன்" 宗 来 牵