பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

217

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்

 மனுச் செய்தோர்  அனுமதி பெற்றோர்
1.  பார்ப்பனர்

458 பேர்

77 பேர்

2.  பார்ப்பனரல்லாதவர்

692

172

3.  கிறித்துவர்

144

22

4.  முஸ்லீம்

83

21

5.  ஆதித்திராவிடர்

17

17

பல்லாவரத்தில் வாழ்ந்த தனித் தமிழ்க் காவலர் மறைமலையடிகள் வாழ்வின் இறுதிக் கட்டத்திலிருப்பதைப் பெரியார் கேள்வியுற்றார். 14.9.1950 அன்று சென்னையில் திரு. வி. கல்யாண சுந்தரனாரையும் பார்த்து விட்டு, நேரே பல்லாவரம் சென்று மறைமலையடிகளையும் கண்ணுற்று, நெஞ்சம் துணுக்குற்றார்' பெரியார். மறுநாள் மறைமலை என்னும் அந்தத் தமிழ்ப் பெருமலை சாய்ந்தது!

1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் தந்தை பெரியாரின் 72வது பிறந்த நாள். ஆகா! தமிழர்க்கு எத்துணை மகிழ்ச்சி! அந்த ஒரு நாள் மட்டும் திருநாள்! மறுநாள்?

பெரியார் பொன்மொழிகள் வழக்கு, திருச்சி நீதி மன்றத்தில் 11.3.50 முதல் நடந்துவந்ததல்லவா? அரசினர்க்கு என்ன கருணையோ? அண்ணாவின் ஆரிய மாயை வழக்கும் அதே நீதி மன்றத்திலன்றோ நடந்தது! இரண்டு வழக்குகளுக்கும் 153A பிரிவில் ஒரே நாளில் ஒரே மாதிரியான தீர்ப்பு! ஆளுக்கு 500 ரூபாய் அபராதம்; கட்டத் தவறினால் ஆறுமாதம் சிறை! இருவருமே அபராதம் கட்டத் “தவறி” 18.9.50 அன்று, திருச்சி சிறைக் கோட்டம் புகுந்தனர். பெரியாருக்குப் பன்னிரண்டாவது முறையாகச் சிறை; இருவர்க்கும் பக்கத்து அறை! பத்து நாள் வாசம்; விழிகள் தாம் பேசும்; தின்பண்டங்கள்தாம் பரிமாற்றம்; வேப்ப மரத்து நிழல்தான் குளிர்விக்கும் என்ன வியப்பு இருவருக்குமே 28.9.50 அன்று காலை 10 மணிக்குத் திடீர் விடுதலை! ஏன்? வெளியில் பெரியாரை விடுதலை செய் அண்ணாவை விடுதலை செய்!' எனத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரே குரலில் எழுப்பிய இடிமுழக்கம்! எங்கே மீண்டும் இணைந்து விடுவார்களோ என்ற அச்சமா?

அண்ணாவை அழைத்துச் செல்லத் தோழர்களோ, வாகனமோ வாரவில்லை பெரியாரின் வேனிலேயே அண்ணாவை எறிக் கொள்ளுமாறு பெரியார் கண்களால் ஆணையிடத் தலைவரின் கருணை மழையில் நனைந்த தளபதி, தலைதாழ்த்தி, வாய் மூடி, அமர்ந்து வர- அடடா; என்ன உருக்கமான காட்சி! தாம் முன்னதாகத் தம் மாளிகையில் இறங்கிக் கொண்டு, அண்ணாவைச் சங்கரம் பிள்ளை வீட்டில் இறக்கிவரப் பணித்தார் பெரியார்!