கவிஞர் கருணானந்தம்
234
கல்யாணம் செய்யும்போது, கலப்பு மணச் சாதியில்தான் பார்க்க வேண்டும்; மற்றவர்கள் முன்வர மாட்டார்கள். சாதி ஒழிப்புக்கு அரசாங்கமும் சட்டம் செய்வதோடு, உதவவும் வேண்டும். மத சாஸ்திரங்களை அப்படியே வைத்துக்கொண்டு, சாதியை ஒழிப்பது இயலாது என்று கருத்தறிவித்தார் பெரியார்; 1952 பிப்ரவரி 22-ஆம் நாள் “விடுதலை”யில் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். .
1952 ஜூன் மாதம் சேலத்தில் நடைபெற்ற சென்னை ராஜ்யத் திராவிடர் கழகப் பொது மாநாட்டில், பெரியார், தாம் தலைமை ஏற்க விரும்பவில்லை; வேறு யாரையாவது கேட்டுக் கொள்ள முயன்றும் நிறைவேறவில்லை ; அதாவது, தகுந்தவர்களாக யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் வரவேற்புக் குழுவின் தலைவராகிய பெண்ணாகரம் எம்.என். நஞ்சையா, செயலாளராகிய சேலம் கே. ராஜாராம் பி.ஏ. ஆகியோர் விரும்பியவாறு தாமே தலைமை ஏற்க நேரிட்டதாகவும், அதனாலேயே தாம் புதிய திட்டங்களோ கிளர்ச்சிகளோ அறிவிக்க இயலவில்லை என்றும் பெரியார் வருந்தினார். தகுதியான நண்பர்கள் கிடைக்காதது குறித்தும், மிகுந்த ஆதங்கம் தெரிவித்தார். திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகள் மூன்று:- முதலாவது வருணாசிரம மூடநம்பிக்கை ஒழிப்பு; இது கடவுள், மதம், பார்ப்பானுக்கு விரோதம் இரண்டாவது, திராவிட நாடு பிரிவினை; இது சர்க்காருக்கு விரோதம்/ மூன்றாவது வகுப்புவாரி உரிமை; இதையும் நம்மவர்கள், தம்வரையில் அனுபவிக்க முன் வருவார்களே தவிர, இதற்காகப் போராடப் பயப்படுவார்கள்! கழகத்தாரல்லாத வெளியார் கிடைக்காமல் நான் ஏமாற்ற மடைந்தேன் -என்கிறார் பெரியார்.