பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

294


மனிதனையே கடிக்க வந்து விட்டது. என்னும் பழமொழி போல இருக்கிறது!.

இந்த பனியா - பார்ப்பான் ஆட்சி ஏற்பட்ட பின் தமிழர்கள் சிறைக் கைதிகள் போல்தான் இருக்கிறோம்! அங்குள்ள கான்விக்ட் வார்டர் போலத் தமிழ்ச் சேவகர்கள். தமிழ் அதிகாரிகள் இருக்கிறார்கள். தமிழர்கள் மந்திரிகளாக வந்தாலும், அதே கான்விக்ட் வார்டர் நிலைதான்!

தமிழ் மக்களே! இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களுடைய கடமை என்ன? அரசியல் சட்டம் ஏன், யாருக்காகக் கொளுத்தப்பட்டது? நான் உட்பட 3000 பேர் எதற்காகச் சிறை பிடிக்கப்பட்டோம்.

பார்ப்பனர்களைக் குத்தியதற்கா? கொன்றதற்கா? பார்ப்பனச் சேரியில் நெருப்பு வைத்துக் கொளுத்தியதற்கா? பார்ப்பனப் பெண்களை இம்சித்ததற்கா? இல்லை இல்லவேயில்லை! மற்றவர்கள் இதற்காகச் சிறையில் இல்லை ! என் ஒருவன் மீது தான் குத்தச் சொன்னதாகவும், கொல்லச் சொன்னதாகவும், கொளுத்த சொன்னதாகவும் வழக்குப் போட்டிருக்கிறார்கள்; அதுவும் ' வெள்ளரிப் பழத்திற்குப் பூண்போட்டுக் கெட்டிப்படுத்துவது' போன்ற குற்றம்தான் சாட்டப்பட்டிருபறெது.

சாதி காப்பாற்றப்படும் சட்டம் எங்களுக்கு வேண்டாம்; அதைத் திருத்து! என்பதற்கு அறிகுறியாக, அறிக்கையெல்லாம் வெளியிட்டு, ஒரு துண்டுக் காகிதத்தைக் கொளுத்துவதன் மூலம் அறிவுறுத்திக் காட்டினோம். அதற்காகக் குழந்தைகள், குஞ்சுகள், பெண்கள், வயோதிகர்கள், கர்ப்பிணிகள், இளைஞர்கள் உட்படப் பத்தாயிரம் பேர் கொளுத்தியதில், 7000 பேரை விட்டுவிட்டு, 3000 பேரைச் சிறையிலடைத்து, ஊசிப் போன சோளக் கஞ்சியையும், களிமொத்தையையும் உண்ணச் சொல்லிக்; கடும் வேலை கொடுத்துக் கொடுமைப்படுத்தும் இந்த அட்டூழியத்துக்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்? சிறையில் கொடுமைக்காளானவர்களில், லட்சக்கணக்கான ரூபாய்ச் சொத்து, ஆயிரக்கணக்கான ரூபாய் ஆண்டு வரும்படி உள்ள செல்வான்களும், உயர்தர வாழ்க்கையில் உள்ளவர்களும் இருப்பது: இந்த அரசுக்கே தெரியுமே!

இதில் தேருவின் துணிவோ, தீரமோ, கெட்டிக்காரத்தனமே! ஒன்றுமில்லை , தமிழனின் மானமற்ற, சுயநல, ஈனப்பிழைப்பும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் தன்மையுத்தான் புரிகிறது!

என்மீது அடுத்த இரண்டொரு நாளில், கொலைக்குற்ற வழக்கு விசாரணை நடக்கப்போகிறது. என் தோழர்கள் சிறையில்