பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

316


26. 4. 60 அன்று நடந்த சிறப்பான விழாவில், பி.கஸ்தூரிபிள்ளை தஞ்சையா, குன்றக்குடி அடிகளார் ஆகியோருடன் பெரியாரும் கலந்துகொண்டார், மே 15-ம் நாள் திருச்சியில் நடைபெற்ற மத்திய விரிவாக சபைக்கூட்டத்தில் எஸ். குருசாமி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

I960 ஜூன் திங்கள் 5.ஆம் நாள் மாலை, தமிழ்நாடு நீங்கலாக இந்திய யூனியன் எரிப்புப் போராட்டம் என்று பெரியார் அறிவித்து விட்டார் “நாடெங்கும் தீவத்தி ஊர்வலமும் நடைபெறும். இது அரசியல் போராட்டமல்ல இனப் போராட்டம் போராட்ட வீரர்களை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்த நான் மே 31, ஜூன் 1, 2 3, 4 தேதிகளில் ரயில் மார்க்கமாகப் பயணம் செய்வேன்” என்றும் பெரியார் கூறிவிட்டார். 25-5-60 “கரண்ட்” இதழில் பெரியார் படத்தையும் போட்டு; சுதந்திரத் தமிழ்நாடு தனியாகப் பிரிய வேண்டுமென்ற கோரிக்கைக்காகப் பெரியார் போராட்டம்! இது 23 ஆண்டுகாலமாய் இருந்துவரும் கோரிக்கை வெற்றிக்காகப் பெரியாரின் 1960-ம் ஆண்டு வேலைத்திட்டம் இந்திய யூனியன் பட எரிப்பு (தமிழ்நாடு தவிர்த்து) என்ற செய்தி பிரதான இடத்தில் வெளியிடப்பட்டது.

நாம் தமிழர் இயக்கம் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுத்திருந்தது. பெரியார் அபாயச் சங்கு ஊதினார். ஆயிரம் வீரர்களாவது சிறை செல்வதாக மட்டுமில்லாமல் உயிரையும் பலி கொடுக்கத் தயாரான தன்னல மறுப்பு உணர்வுடன் வந்தால்தான், இந்தியக் கூட்டாட்சி என்னும் பார்ப்பனப் பிரசிடெண்ட், பார்ப்பனப் பிரதமர் எனும் ஏகபோக ஆட்சியிலிருந்து விலகித் தமிழ்நாட்டைத் தனிச் சுதந்திர நாடாக ஆக்கித் தமிழ்நாடு தமிழனும் தப்பிப் பிழைக்கலாம் என்றார் பெரியார். “தமிழ்நாடு என்ற பெயரை இந்த ராஜ்யத்துக்குச் சூட்டுகின்ற அதிகாரம், சக்தி எல்லாம் டெல்லி ஆட்சிக்கே உண்டு. ஆகையால் தமிழ்நாட்டு அரசோடு முட்டிக் கொள்ளாமல் அநீதிகளுக்குக் காரணமான ஆதிபத்ய டெல்லி ஆட்சியின் பிடியிலிருந்து விடுபடவேண்டும். தாய்த்திரு நாட்டுக்குத் தமிழ்நாடு என்ற பெயர்கூட இல்லையே என்று கொதிக்கும் உள்ளங் கொண்ட இளைஞர்களே தோழர்களே புலவர்களே பெருமக்களே எழுத்தாளர்களே பேச்சாளர்களே நாடு பிரிவினையைத் தவிர வேறு வழியில்லை . ஜூன் 5-ல் யூனியன் படத்தை ஒரு கையிலும் தீப்பந்தத்தை மறு கையிலும் தூக்கி ஊர்வலம் வந்து டெல்லி ஆதிக்க ஆட்சிக்குத் தீ மூட்டுங்கள்! ஊர்வலம் வருவதில் யாருக்காவது வெட்கமோ, பயமோ இருக்குமானால் அவரவர் வீட்டு வாயிலில் கொளுத்தி விட்டுப் பெயர் கொடுங்கள்” என்றார்.

“பி.ஜி.கேர் தலைமையில் அமைந்த இந்திக் கமிஷன், அதில் ஓர் உறுப்பினரான டாக்டர் சுப்பராயனுடைய ஆட்சேபக் குறிப்பையும்