கவிஞர் கருணானந்தம்
385
உரியவனுக்குப் பங்கு இல்லையா? அரசாங்கம் உடனே ஒரு சுற்றறிக்கையாவது விடவேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முதலுரிமை கொடுத்துவிட்டு, மற்றதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று. நமது முதல் மந்திரியார் செய்வாரா? அவரோ மேல் ஜாதி"
தொடர்ந்து பெரியார் எழுதி வந்தார்; சமுதாய நீதியை வழங்கித், தற்காலக்கல்வி நெருக்கடியைத் தீருங்கள் என்று. “காங்கிரஸ் ஜாதியை ஒழிக்கிறது, பணக்காரனை ஒழிக்கிறது; அப்பேர்ப்பட்ட காங்கிரசை ஒழிக்கத் திராவிட முன்னேற்றக் கழகம் விபீஷணராக இருக்கிறது. உழவர் கட்சி, குடி அரசுக் கட்சி, முத்து ராஜு கட்சி, நாம் தமிழர், தமிழ் அரசு, இடதுசாரி கம்யூனிஸ்டு, ஆச்சாரியாரின் கட்சி, வியாபாரிகள் கட்சி இவை அத்தனையும் சேர்ந்து காங்கிரசை பலவீனப் படுத்துவது சமூகத் துரோகமல்லவா?” என்று பெரியார் வினவினார். “மரியாதைக்குரிய குன்றக்குடி அடிகளாரைக் கோர்ட்டுக்கு வரச்சொல்லி 500 ரூ. அபராதம் போடுவதா? தமிழன் ஆட்சியே தமிழர்க்குக் கேடாவதா? பதவி முழுவதும் பார்ப்பனுக்கா? வகுப்புரிமை பெற இயலாதென்றால் இந்திய யூனியனிலிருந்து விலகுங்கள். தமிழகம் பிரிந்தாலன்றிக் குறைதீர வழியில்லை. மதவெறியுள்ள ஆட்சியில், சமதர்மம் எப்படி வரமுடியும்? இந்த மந்திரிகளே, எல்லாரும் தகுதியற்ற மந்திரிகள்! இந்த அரசாங்கமே நமக்குத் தகுதியில்லை !” - ஆகஸ்ட் 10 முதல் 16 வரை சென்னையின் பல முக்கிய பேட்டைகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பெரியாரின் முழக்கம் இவ்வாறுதான் இருந்தது!