442
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
எழுதுகையில் - காங்கிரஸ் - (மைனஸ்) காமராசர் =0 (ஜீரோ) தானே? நான் இன்னமும் காமராஜர் தலைமையில் உள்ள காங்கிரஸ், சிறு மாறுதல்களுடன் நாட்டை ஆளவேண்டுமென்று ஆசைப்படுகிறவன்; ஆனால் அடுத்த தேர்தல் என்ன ஆகுமோ என்று பயமாயிருக்கிறது - என்று பெரியார் குறிப்பிட்டார்.
பம்பாயில் சிவசேனைக்காரர்களின் அட்டகாசம் உச்ச கட்டத்திலிருந்து, தமிழர்கள் பயங்கரமாகத் தாக்கப்பட்டனர். அரசு எந்தப் பாதுகாப்பும் தர இயலவில்லை . பெரியார் இந்தப் பிரச்சினையைத் தமது சொந்தப் பிரச்சினையாகப் பாவித்தார். “தமிழனுக்கு மானம் வேண்டாமா? பம்பாயில் சிவசேனைக்காரன் தமிழனை அடித்தால் அதற்குப் பரிகாரமாக இங்கிருக்கிற பம்பாய்க்காரனை நாம் விரட்ட வேண்டாமா?. வெறுக்கத் துணிந்தவன்தான் வெற்றி பெறுவான்" என்றெல்லாம் எழுதினார். திருச்சி சென்றவுடனே, சிவசேனை எதிர்ப்பு மாநாடு நடத்திட ஆவன செய்து வந்தார்; தமது பிறந்த நாளுக்கு முதல் நாள் என்று, தேதியும் குறித்தார்!
“விடுதலை” தலையங்கம் பெரியார் எழுதினார். பொங்கும் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தார். தி.மு.க அரசும், மந்திரிகளும், அதிகாரிகளும் தம்மிடம் மிகுந்த கனிவும் மரியாதையும் நன்றியும் அன்பும் செலுத்துகிறார்களாம். ஒரேயடியாகப் புகழ்ந்தார். அதில் உண்மையில்லாமல் இல்லை! திருச்சி தேவர் மன்றத்தில் சிவசேனை எதிர்ப்பு மாநாடு பெரியாரின் சிம்ம கர்ச்சனையில் நிறைந்தது. இனிமேல் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது வணக்கம் கூறாமல் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று கூறச் சொன்னார். "சென்னையில் இதைப்பற்றி விளங்குவோம் அக்டோபர் - 1ல் நாடெங்கும் கண்டனக்