கவிஞர் கருணானந்தம்
473
படைத்த கொள்கை வீரர் கலைஞர்“ என்று புகழ்ந்தார். புதுச் சேரியில் ஒரு பொதுக் கூட்டத்தில் “ரிஷிகளும், மகாத்மாக்களும் நாட்டு மக்களிடையே முட்டாள் தனத்தை வளர்த்தார்கள். மடமையை வளர்க்கும் பத்திரிகைகளும், புலவர்களும் மேலும் தூண்டினார்கள். கடவுளை ஒழித்தால் மட்டுமே நாம் பேதமற்ற சமுதாயம் காண முடியும். கடவுள் என்கிறார்களே, அது என்ன ஒரு பொருளா? அது இயற்கைப் பொருளா? செயற்கைப் பொருளா? எந்த மருந்தானாலும் அதற்கு ஒரு formula இருப்பது போல, எந்தப் பொருளுக்கும் ஒரு formula இருக்க வேண்டுமே? கடவுளின் கூட்டு முறை, அல்லது செய்முறை formula என்ன? யாராவது சொல்ல முடியுமா?” என்று உலக மேதைகளின் சிந்தனைக்கும், கேள்விக்குறி ஒன்றை எழுப்பினார் பெரியார்.
காங்கிரஸ் தலைவர்களாக சி.சுப்ரமணியம், நிஜலிங்கப்பா ஆகியோர், இராமாயணம், பாரதம் ஆகிய பகுத்தறிவுக்குப் புறம்பான கதைகளை அரசியல் பிரச்சாரத்துடன் இணைத்துப் பேச, இவர்கள் பார்ப்பனரல்லாதாராயிருந்தும், எப்படி மனம் வருகிறது - என்று பெரியார் கண்டித்தார். 13.7.68 அன்று “விடுதலை” பெரியாரின் வேகமான தலையங்கம் ஒன்றைத் தாங்கி வெளி வந்தது. “தமிழ் நாடு சுதந்தர நாடு ஆகவேண்டும்” இது தலைப்பு. இடம் 2 பக்கங்கள். "காங்கிரசுக்கு வெட்கம் மானம் வேண்டாமா? 48க்கு 139 ஆக வெற்றி