கவிஞர் கருணானந்தம்
493
வேண்டும். கவுண்டர்- செட்டியார் கலப்புத் திருமணம் என்று பயந்து விட்டார்கள். செட்டிநாட்டில் நான் நடத்திய எத்தனையோ கலப்புத் திருமணங்களில் ராஜாவும் கலந்து கொண்டாரே!" என்று எழுதினார்.
14.12.1968 அன்று, சிறுநீர் இறங்குவதில் தொல்லை ஏற்பட்டதற்காகப் பெரியார் சென்னை பொது மருத்துவமனையில் சேர்ந்து, 28ந் தேதி மாலை இல்லத் திரும்பி, 13ந் தேதி முதல், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
மருத்துவமனையில், வாய் சும்மாயிருந்தாலும் பெரியாருக்குக் கை சும்மாயிருக்குமா?: "நாகர்கோயில் தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றே ஆகவேண்டும். அவரால் தமிழ் மக்களுக்கு அளவிட முடியாத நன்மைகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்க்க வேண்டாம் என்று சொல்வதற்கு, நான் தி.மு.க. வுக்கு ஒன்றும் உதவி செய்திடவில்லை . ஆனாலும், அவர்களுக்கு இராஜாஜியைத் திருப்திப்படுத்துவது எப்படி சுடமையாக இருக்கிறதோ அப்படியே தி.மு.க.வுக்கு ஞாபகப்படுத்துவதும் என் கடமையாக இருப்பதால், சொல்லுகிறேன்" என்று தலையங்கமே தீட்டினார். “நமது பிற்படுத்தப்பட்ட மக்கள் சீக்கிரம் படித்து முன்னேற, 4-வது வயதிலிருந்தே படிப்பு தொடங்கவும், கட்டாயக் கல்வியைக் கண்டிப்பாக அமுல் செய்யவும், பகுத்தறிவின் அடிப்படையில் பாடத்திட்டங்களை அமைக்கவும் நமது முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் ஆவன செய்ய வேண்டும்" என்று இன்னொரு தலையங்கமும் எழுதினார் பெரியார்.
தஞ்சை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் 42 தாழ்த்தப்பட்ட மக்களை வீட்டோடு கொளுத்திச் சாம்பலாக்கிய கறைபடிந்த வரலாறு, 24.12.68 அன்று எப்படியோ நிகழ்ந்து, அண்ணாவின் உடல் நலத்தை மேலும் குலைத்துவிட்டது. "இந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதியில்லை . இது ஜனநாயகத்தால், ஏற்பட்ட மிகப்பெரிய