494
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
கேடாகும். எத்தனையோ பல வன்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று, இன்று கீழவெண்மணி போன்ற நடுங்கத்தக்க அக்கிரமம் வரை கொண்டு வந்து விட்டுவிட்டது. நம்முடைய நாடு மீண்டும் அரசநாயகமாகப் போக வேண்டும். அல்லது தனித்தமிழ் நாடு பிரித்துத் தரப்படவேண்டும். அல்லது அந்நிய ஆட்சி வேறு ஏதாவது வரவேண்டும். Patriotism is the last reguge of a scoundral-Dr.Johinson. தேசபக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம்-ஜான்சன்” - என்று வேதனையை வெளியில் காட்டும் தலையங்கம், பெரியாரால் 28.12.78 "விடுதலை" யில் எழுதப்பட்டது.
காமராஜர் நாகர்கோயிலில் வெற்றி பெற்றதும், பெரியார் 11.1.69 அன்றே தலையங்கம் தீட்டிவிட்டார். “காமராஜர் ஜெயித்தார். தி.மு.க. (தேர்தலில் நிற்காவிட்டாலும்) தோற்றது. காமராஜர் 2,49,437. தோற்றவர் 1,21,236, இருந்தாலும், காங்கிரசைவிட தி.மு.க. பெரிய கட்சிதான்! அவர்களுடைய கெட்ட வாய்ப்பாக இப்போது இருந்து வருவது இராஜாஜியின் சம்பந்தம்தான். இது எப்படி என்றால் ஒரு படி அரிசியும் ஒரு படி உமியும் ஒன்றாய்க் கலந்து, உமியைப் புடைத்து ஊதித்தள்ளி, மீதியைச் சாப்பிடுவது போன்றதாகும். இதில் இப்போது எனக்குள்ள கவலை, நடக்க இருக்கும் நகரசபைத் தேர்தல்களிலும் தி.மு.க. வைப் பாதிக்குமே என்பதுதான். ஆகையால் அண்ணா அவர்கள் இதற்குப் பிராயச் சித்தம் தேடித், தோல்வியைச் சமாளிக்க