கவிஞர் கருணானந்தம்
507
மதிக்காமல் பேசினால், அவரையும் இப்படித்தான் நான் கண்டிப்பேன் உள் விவகாரம் என்ன என்பது எனக்குத் தெரியாது. கட்சியின் கவுரவத்தைக் காப்பது தலைவரின் கடமை. தி.மு.க. இனியும் கறைந்தது 2 பீரியட் (Period) பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். தி.மு.க. என்னை மதித்தாலும் மதிக்காவிட்டாலும், அவர்கள் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தி.மு.க. வைப் பாதுகாப்பதில் அண்ணா எனக்குப் பங்கு ஏற்படுத்திவிட்டார். அதற்காகத்தான் நிபந்தனையற்ற unreserved தொண்டு ஆற்றி வருகிறேன். தி.மு.க.வில் சிலருக்கு ஜாதி உணர்ச்சி, வகுப்பு உணர்ச்சி, படிப்பு உணர்ச்சி, பண உணர்ச்சி இருக்கிறது. தம்மையே மறக்கும் படியான அளவுக்குப் பதவி உணர்ச்சி, பொறாமை உணர்ச்சி இருக்கிறது. இவற்றையெல்லாம் மறந்து விட்டு இனஉணர்ச்சி ஒன்றை மட்டும் பெறவேண்டும். இதற்காக எதையும் விட்டுக் கொடுக்கும் துணிவும் தாராளமும் வேண்டும்!" என்று பெரியார், உரிமையுடன், உருக்கமுடன் எழுதியிருந்தார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் அமைச்சர் ப.உ.சண்முகம் தலைமையில், பெரியார் அண்ணா படம் திறந்தார். “தி.மு.க. கழகம் பிரிந்தவுடன் நான் அண்ணாவை ரொம்பக் கண்டித்தேன். குறை சொல்லிக் கொண்டேயிருந்தேன். எதற்குமே பதில் சொல்லாமல், மாறாக என்னைப் புகழ்ந்து பேசிவந்தார் அண்ணா! இந்த உயர்வான பண்பைப் பாராட்டித்தான், மக்கள் அவரை அன்போடு ஆட்சிக்கு அனுப்பிளார்கள். என்னுடன் இருந்த காலத்திலும்கூட நாங்கள் இருவரும் கூட்டத்திற்குச் சென்றால், அண்ணாவைப் பேசச் சொல்லுங்கள் என்று தான் மக்கள் பிரியமுடன் கேட்பது வழக்கம்", என்று புகழ்ந்துரைத்தார் பெரியார்.