பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

508

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சொத்தை அபகரிக்க முடியாதபடி!- என்றார். “தமிழர் நல ஆட்சியான தி.மு.க.வின் மற்றொரு சாதனை" என்று "விடுதலை" முதல் பக்க ஏழு காலச் செய்தியில் கே.வீராசாமி தலைமை நீதிபதியாக மே மாதம் முதல் நியமனம் பெற்றதைப் பாராட்டியது.

இப்போதைய சுதந்திரம், கணவனுக்கு அடிமையாவதன் மூலம் மனைவி வைரக்கம்மல், வைர நெக்லஸ், அதிசய அற்புதப் பட்டு ஜரிகை உடைகள் அணிந்திருப்பது போன்றதேயாகும் " - என்றும்; "மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்பது, வெறும் செருப்பால் அடிக்காதே, பட்டுக்குஞ்சம் கட்டி, அதால் அடி என்று சொல்வது போன்றதேயாகும்." என்றும்; பெரியார் உவமைகள் வாயிலாகத் தமிழ்நாடு பிரிவினையின் அவசியத்தை எழுத்தால் உணர்த்தினார். பூரி சங்கராச்சாரியார் எப்போதுமே வாய்க் கொழுப்பு மிகுந்தவரல்லவா? தீண்டாமை இந்து மதக் கோட்பாடுதான் என்று கூறியிருந்தார். குன்றக்குடி அடிகளார் கண்டித்தார். உள்துறை அமைச்சர் சவான், சங்கர் ராவ்தேவ் ஆகியோர் தவறென்றனர். அண்ணாமலை நகர் மாணவர்கள் கொடும்பாவி கொளுத்தினர். மைசூருக்கோ, தமிழகத்துக்கோ வந்தால் கைது செய்வோம் என்றனர் மாநில அதிகாரத்திலிருந்தோர் ஜகஜீவன்ராம், பொது இடத்தில் தீண்டாதவரை அனுமதிக்க மாட்டோம் என்று யாராவது சொன்னால், மீறி நுழைய வேண்டும்" என்பதற்காக, “சுதேசமித்திரன் அவரைக் கண்டித்திருந்தது. பெரியார் சும்மாயிருப்பாரா? "பொது இடத்தில் தானே நுழையச் சொன்னார். பார்ப்பான் வீட்டில் அல்லவே! சட்ட விரோதமாய் நடந்து, தங்கள் ஜாதி உயர்வை எப்படியும் காப்பாற்றிடப் பார்ப்பனர் நினைக்கும்போது, போலீஸ் ஸ்டேஷனுக்கே நெருப்பு வைக்கிற இந்தக் காலத்தில், பார்ப்பான் வீட்டுக்கு நெருப்பு வைப்பது கஷ்டமா? பார்ப்பனர்களே, ஜாக்கிரரை! வாயை அடக்குங்கள்!" என்று ஆவேசமாய் எழுதினார் பெரியார்.

புதுவை அமைச்சர்களைப் பாராட்டிப் பேசும்போது “பைத்தியக்காரத்தனமாய் உங்கள் ராஜ்யத்தில் மதுவிலக்கு கொண்டுவர முயலாதீர்கள்! பகுத்தறிவோடு நடந்து கொள்ளுங்கள்" என்றார் பெரியார். “நம் அரசியலில் மது விலக்கும், கதரும் இருபெரும் மடமைகள். நான் ரயில் பிரயாணத்தில் கூட ராட்டினம் சுற்றிய மடையன். சாணி வழிக்கும் துணியாகக் கூடப் பயன்படாத கதரை உடுத்தியவன்; காந்தியாரே, 'Mr. Ramaswamy! you need not spin hereafter. I exempt you for three months' என்று எனக்கு எழுதியும், விடாதவன்" என்றார்.

ஏப்ரல் மாதமும் பெரியார் தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மன்னார்குடியில், மாவட்ட தி.க. தலைவர் தோலி