பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

510

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



எதையுமே கொண்டாடக்கூடாது பார்ப்பானை பிராமணன் என்று சொல்லக்கூடாது என்பதைக் கோட்பாடுகளாகவே பெரியார் கூறிவந்தார்.

கடவுளர் படம் அகற்றும் சுற்றறிக்கை வாபஸ் பெறப் படவில்லை என்று கலைஞர் வேலூரில் 26ந் தேதி கூறினார். வேலூர் சிறையில் ஞாபகார்த்தமாக, அண்ணா சிலை ஒன்றைக் கலைஞர் திறந்து வைத்தார். வறட்சியினால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1 கோடியே 86 லட்சம் வரும் கல்வியாண்டில் பி.யூ.சி. வகுப்பில் சேர 73,680 பேருக்கு இடவசதி செய்யப் பட்டுள்ளது - என்றார் முதல்வர்.

தர்மபுரியில் பெரியாரின் முழுஉருவ வெண்கலச் சிலை ஏழடி உயரமுள்ளதாக அமைக்கப்பட்டுத், திறப்பு விழா பல முறை ஒத்தி வைக்கப்பட்டு, 24.5.69 அன்று மிகுந்த எழுச்சியோடும் சிறப்போடும் நடைபெற்றது. மதியழகன் தலைமையில் கலைஞர் திறந்து வைத்தார். சிலை அமைப்புக் குழுத் தலைவர் எம்.என். நஞ்சையா வரவேற்றார். சி.பா. ஆதித்தனார், அன்பில் தர்மலிங்கம், கே. ராஜாராம் எம்.பி., அரூர்முத்து எம்.பி., கி.வீரமணி, பெரியார் ஆகியோர் உரையாற்றினார்கள், நீதிபதி கே.நாராயணசாமி வந்திருந்தார். அமைச்சர் பெருமக்களுக்கும், பெரியார் அவர்களுக்கும் தர்மபுரி நகராட்சி மன்றத்தின் சார்பில், மாலையில் வரவேற்பு வழங்கப்பட்டது. சிலையடியில் பீடத்தின் ஒரு புறத்தில் கடவுள் மறுப்பு வாசகங்கள் கல்லில் பொறிக்கப்பட்டிருந்தன. இது புதிதல்லவெனினும், வெறும் வாயைமெல்லும் பத்திரிகைகளுக்கு ஒரு பிடி அவலாகக் கிடைத்தது! இது மேலும் இப்படிச் செய்யவே தூண்டும் என்றார் பெரியார்.

தர்மபுரியில் 25.5.69 பெரியார் சிலையைத் திறந்து வைத்த தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் சொற்பொழிவு:-

“என்னுடைய பெற்றோர்கள் வேறொரு பள்ளிக் கூடத்துக்குப் போபோ என்று என்னைத் துரத்திய நேரத்தில், அந்தப் பள்ளிக் கூடத்திற்குப் போக மறுத்து, நான் பெரியார் பள்ளிக்கூடத்துக்கு வந்தவன், நண்பர் வீரமணி அவர்கள், அய்யா அவர்களுக்கு இருபுறமும் உள்ளவர்களையெல்லாம் சுட்டிக்காட்டிப், பெரியார் அவர்களது பெருந்தொண்டினால் விளைந்த பயன் என்று சொன்னார்கள். அவர்கள் மனிதர்களைத்தான் சுட்டிக் காட்டினார்கள்! பெரியார் அவர்களுக்குப் பக்கத்திலேயே இருக்கிற நாய்க்குட்டியை வீரமணி சுட்டிக் காட்ட வில்லை. நாய் நன்றியுள்ள பிராணி. பெரியார் பக்கத்திலே எப்போதும் நன்றியிருக்கிறது என்பதற்கு அடையாளமாகத்தான் நாங்கள் அவர்கள் பக்கத்திலே இருக்கிறோம்.