பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

512

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



அப்படிப்பட்ட ஆற்றல் பெற்றவர்! அறிவின் சுரங்கம்; பகுத்தறிவுப் பேழை; கருத்துக் கருவூலம்: தமிழகத்திலே மண்டிக்கிடந்த மூடநம்பிக்கைகளை எல்லாம் உதறி விடுவதற்காக கிளர்ந்து எழுந்த புயற்காற்று, பெரியார் ராமசாமி அவர்களாவார்கள்!

எத்தனையோ சீர்திருத்தச் சிற்பிகளெல்லாம் தோன்றினார்கள். ஆனால் அவர்களெல்லாரும் தெய்வங்களாக ஆக்கப்பட்டு, அவர்களுடைய கொள்கைகள் அழிக்கப்பட்டன.

தன்னுடைய அயராத உழைப்பால், அறுபதாண்டுக்காலம், அவருடைய கால்படாத இடம் தமிழகத்திலே இல்லை; அவர் செல்லாத குக்கிராமம் இல்லை; அவர் பேசாத பட்டிதொட்டி இல்லை; அவருடைய குரலை எதிரொலிக்காக மனைகளே இல்லை! நான் எண்ணிக் கொள்வதுண்டு; பெரியாருக்கென்று ஒரு வீடு எதற்காக என்று! அதையும் கேட்டுவிடப் போகிறேனோ என்று பெரியார் அவர்கள் பயந்துவிட வேண்டாம். அவர் இருப்பதெல்லாம் காரிலேதான்; அவர் வாழ்வதெல்லாம் காரிலேதான்!

வேளாண்மைத்துறை அமைச்சர் கோவிந்தசாமிக்கு உடல் நலமில்லை. பெரியார் பொது மருத்துவமனைக்கு வந்து பார்த்துச் செல்கிறார். அடுத்த நாள், “பெரியார் எங்கே?" என்று வீரமணியைக் கேட்டால், “ஜெயங் கொண்டத்திலே நிகழ்ச்சி" என்கிறார். அன்றைக்கு மறுநாள் கோவிந்தசாமி அவர்கள் மறைந்தவுடன், சடலத்தைக் காணப் பெரியார் விரைந்து வருகிறார். கொளுத்துகிற வெய்யிலில், தள்ளாத பருவத்தில், மயான பூமிவரை வந்து விடுகின்றார்.

என்ன காரணம்? தான் பெற்ற பிள்ளைகள், தான் வளர்த்த பிள்ளைகள், தான் ஆளாக்கிய பிள்ளைகள், ஆட்சி புரிகிறார்களே என்று மகிழ்ந்திருக்கிற நேரத்தில், இப்படிச் சோதனைக்கு மேல் சோதனையாக வருகிறதே என்று, சோக முகத்தோடு, அவர் அமர்ந்திருந்த காட்சியை நாங்கள் கண்டோம். அது எங்கள் வேதனையை அதிகப்படுத்தியதென்றாலும், ஒரு புறத்தில் எங்களை ஆறுதலுக்கும் ஆளாக்கியது.

அண்ணனை இழந்திருக்கிற எங்களுக்குத் தந்தை பெரியார் அவர்கள் பெரும் ஆறுதலாகத் தோன்றுகிறார்கள். அவர்களை எண்ணிக் கொள்கிறபோது, எங்களுக்கு ஏற்படுகின்ற சங்கடங்களையெல்லாம் போக்கிக் கொள்கின்றோம். பகுத்தறிவாளர் ஆட்சி நடைபெற வேண்டுமென்று பெரியார் விரும்பினார். நடைபெறுகிறது, அவர் மகிழ்கிறார்; பாராட்டுகிறார்! பெரியார் நீண்டநாள் இருந்து, எங்களைப் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்".

3.6.69 அன்று முதல்வர் கலைஞரின் 46-ஆம் ஆண்டு பிறந்த நாளுக்குப், பெரியார், “அன்பும் பண்பும் நிறைந்த அருமைக் கலைஞர்