பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

521



பொதுவாக என் மனம் குழப்பமாக இருக்கிறது. துறவி ஆகிவிடுவேனோ என்னமோ?"

இந்தப்படி எழுதியிருக்கிறேன். அதை ஊன்றிப் படித்தாலே நான் எழுதியதன் தன்மை விளங்கும்.

இப்போது எனக்கு 90 முடிந்து 91 நடக்கிறது என்றாலும், இடையில் ஓராண்டில் என் உடல் நிலையானது 94, 95 என்று கருதும்படியான கிழத்தன்மை ஏற்பட்டு விட்டது. உடல் நிலை மாத்திரமல்லாமல் பஞ்சேந்திரியங்களோடு, புத்தி, மனது, சிந்தனாசக்தி முதலிய தன்மைகளும் மிகக் குறைந்து பலவீனப்பட்டு விட்டன. என்றாலும் இவ்வோராண்டு நாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்தால், எனக்கு மற்ற கருவி கரணாதிகளின் பலக்குறைவு எப்படி இருந்தாலும், மனம் உற்சாகம் அடையும்படியான பல நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன,

முதலாவது நிகழ்ச்சி நமது தி.மு.க. ஆட்சியில் 13 மந்திரிகளில் 13 பேரும் தமிழர்கள் என்பதோடு, 18 அய்க்கோர்ட் ஜட்ஜ்களில் 14 பேர்கள் தமிழர்கள் (பார்ப்பனர் அல்லாதவர்கள்). டெல்லி ஆதிக்கமில்லாத அதிகாரங்களில் 100க்கு 50 முதல் 75 வரை பார்ப்பனரல்லாதவர் இருக்கும்படி ஆகிவிட்டது. அரசியலில், ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் தலைவர்கள் பணியாளர்கள் யாவருமே 100க்கு 100-ம் தமிழர்களேயாவார்கள். இதை அனுசரித்தே, மற்ற நிலைகளும் மாற்றமடைந்து வருகின்றன. இவ்வளவுக்கும் காரணம் தி.மு.க ஆட்சி என்றே சொல்லுவேன். -

காங்கிரஸ் மத்திய ஆட்சியிலும், பச்சையாகப் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிளவும், வடநாடு - தென்னாடு என்கின்ற உணர்ச்சியும் காணப்படும் தன்மை உருவாகிவிட்டது. இவையெல்லாம் நம் தமிழர் சமுதாய விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் நல்ல வெற்றி வாய்ப்பு என்றே சொல்லத் தக்கவையாகும்.

மற்றும் 90-வது பிறந்தநாள் மலரில் குறிப்பிட்ட சலிப்பு இப்போது எனக்குக் குறைவென்றே சொல்லலாம். உதாரணமாகக் துறவியாய்ப் போய்விடலாமா என்று எழுதியிருந்தேனே - இன்று எனக்கு அப்படி எண்ணம் இல்லை. அந்த எழுத்தைப் பார்த்து உயர் காமராசரும், அறிஞர் அண்ணாவும் எனக்குத் தெரிவித்தது போல், அதாவது, 'இப்போது உங்களுக்கு எதற்காகக் கவலை? நீங்கள் நினைத்த காரியம் எது நடவாமல் இருக்கிறது? கவலையை விட்டு விடுங்கள்!' என்று சொன்ன சொற்கள் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றன.

இன்று எனக்குள்ள குறையெல்லாம், தமிழர் சமுதாயத்தில் 'விபீஷணப் பரம்பரை' வளர்ந்து வருவதுதான். இது தமிழரில் சில