பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

528

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பேசிய கா. காளிமுத்து, விடுதலை பெற்ற தமிழகத்தின் முதல் ஜனாதிபதியாகப் பெரியார் வரவேண்டுமெனத் தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.

ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஏதோ காரணமாய் வேலை நிறுத்தம் செய்தபோது, பெற்றோர்களில் 200 பேர் ஒன்று திரண்டு, கம்பு, பிரம்பு சகிதமாய், மாணவர்களை விரட்டிச் சென்று, பள்ளியில் விட்டதைப் பாராட்டி, ஈரோடு பெற்றோர்களின் சீரிய நடவடிக்கை" என்று "விடுதலை" தலையங்கம் பாராட்டிற்று. 12-ந் தேதி.

டிசம்பர் 16, 17 தேதிகளில் கடவுளைப் பற்றிப் பெரியார் எழுதிய இரு தலையங்கக் கட்டுரைகள் சிந்தனைக்கு விருந்தாகும்:- "பெரு மழையால், பூகம்பத்தால், இடி விழுவதால், பெரும்புயல் காற்றுகளால் பயிர்கள், கால்நடைகள், வீடுகள் சேதமாகின்றன. பல நாசங்கள் ஏற்படுகின்றன. இதில் சிந்திக்கும்படியான விஷயம் என்னவென்றால், மேற்கண்ட கேடுகளில், சேதங்களில், நாசங்களில், ஜீவ அழிவுகளில் எந்த ஒரு சிறு அளவுக்கும் ஆறறிவு படைத்த மனித வர்க்கத்தால், எந்தவிதமான பாதுகாப்பும் செய்து கொள்ள முடியாத நிலையில், அனுபவித்தே தீரவேண்டியதாகவும், பல நேரங்களில் அவை நிகழும் வரை தெரிந்து கொள்ள முடியாததாகவும் இருக்கும் விசித்திரம்தான்.

இந்த நிலைக்குக் காரணம் என்ன? 'கடவுள் சித்தம்' என்பது நானே? அது உண்மையாயிருக்குமானால், இதிலிருந்து கடவுளை எவ்வளவு அயோக்கியன் என்று கருத வேண்டியிருக்கிறது? இந்நிலையில் கடவுள் இருப்பானேயானால், அவன் உலகத்தைப் படைத்ததே முட்டாள் தனம் அல்லது அயோக்கியத் தனம் என்றுதானே சொல்ல வேண்டியிருக்கிறது? ஏனெனில் இந்த மாபெரும் உலகத்தைப் படைத்து, அதில் ஏராளமான ஜீவன்களைப் படைத்து, அவை திருப்தியாய் வாழ்வதற்கில்லாமல், பசி பட்டினி நோய் துன்பம் தொல்லை வேதனைகள் உண்டாக்கி, நாசமடையச் செய்வது என்றால், இதில், அறிவுடைமையோ கருணையுடைமையோ நேர்மையுடைமையோ ஒழுக்கமுடைமையோ என்ன இருக்கிறது?

இந்த நிலையிலுள்ள ஒரு கடவுளுக்காக என்று, பகுத்தறிவு உள்ள மனிதனால், எவ்வளவு பொருள் நேரம் ஊக்கம் முயற்சிகள் செலவழிக்கப்படுகின்றன? கடவுள் பெயரைச் சொல்லி எத்தனை மக்கள் முட்டாள்களாக்கப்பட்டு, ஏய்க்கப்படுகின்றனர்!

எல்லா மக்களும் குறைவற்ற செல்வத்துடனும், நிறைவுற்ற ஆயுளுடனும் வாழ்வதற்குப், பகுத்தறிவுப் பள்ளிகள் மாத்திரம் வைத்து, நிர்வாணமான' சிந்தனா சக்தி தரும் படிப்பைக் கொடுத்தால், நாட்டில் இன்று வீணாகும் செல்வம் நேரம் ஊக்கம் எல்லாம் மீதமாகும்."