பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

530

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



சில காரியங்களில் மக்கள் பொய் சொல்லியாக வேண்டும். சில காரியங்களில் மக்கள் யோக்கியர்களாகிக் தீரவேண்டும். சில காரியங்களில் மக்கள் முட்டாள்களாகித் தீரவேண்டும். ஆனால் கடவுள் விஷயத்தில் மக்கள் இந்த மூன்றும் ஆகித் தீரவேண்டும்.

கடவுளைப் பற்றிய பிரச்சாரத்தினாலேயே பலர் பிழைத்து வருகிறார்கள். அவர்கள் பல கொலை பாதகங்களைச் செய்திருக்கிறார்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள் செய்துள்ள அயோக்கியத்தனங்கள் கொஞ்சமார தொண்டரடிப் பொடி ஆழ்வார் என்ற வைணவப் பார்ப்பான், சம்பந்தன் என்ற சைவப் பார்ப்பான், சமண பவுத்தர்களைக் கொலை செய்யவில்லையா?"

குன்றக்குடி ஆதீனத்தைச் சார்ந்த கோயில்களில், டிசம்பர் 24 முதல், கர்ப்பக் கிரகத்துக்குள் அனைவரும் செல்லலாம் என்று ஆதீன கர்த்தரான அடிகளார் அறிவித்தது, பெரியாரின் பெரிய வெற்றி என்று கருதப்பட்டது. 27-ந் தேதி வெளியான செய்தியின்படி, டால்மியாபுரம் ரயில்வே ஸ்டேஷன் பெயரைக் கல்லக்குடி - பழங்காநத்தம் என்று மாற்ற மத்திய அரசு ஒப்புக் கொண்டதாம். “இந்தப் பிரம்மாண்ட வெற்றிக்குப் பாராட்டுதல்” என்று பெரியார், கலைஞருக்குத் தந்தி அனுப்பினார்.

30-ந் தேதி பெரியாருக்கு வேலூரில் புதிய டியூப் பொருத்தினார்கள். 31-12-69 வரை கோயில் கர்ப்பக் கிரக நுழைவுக் கிளர்ச்சிக்குப் பெயர் கொடுத்த தொண்டர்களின் எண்ணிக்கை 1,710. அன்றைய "விடுதலை"யில் பெரியார் புத்தாண்டுச் செய்தி வழங்கினார்:- "தமிழனுக்கு இன்றுள்ள கடமை (1) பார்ப்பனப் பத்திரிகைகள் வாசிப்பதைத் தடுத்தல் (2) கோயில்களுக்குப் போவதைத் தடுத்தல் (3) அப்படியே போனாலும் வெறுங்கையோடு போய் வருதல், அப்படியே தேங்காய் எடுத்துப் போனாலும் தானே * உடைத்துத் திரும்பக் கொண்டு வருதல் (4) பூசாரி அல்லது அர்ச்சகனுக்குத் தட்சிணை கொடுக்காதிருத்தல் (5) நெற்றியில் மதக்குறிகள் தீட்டுவதைத் தடுத்தல் (6) பார்ப்பனரைப் பிராமணர் என்று சொல்லாமல் பார்ப்பனர் என்றே சொல்லுதல் - இவை 1970-ஆம் ஆண்டில் கண்டிப்பாய் எல்லா மக்களாலும் கைக்கொள்ளத் தக்கவையாகும்!"

1970 புத்தாண்டு நாளில் எஸ். குருசாமியின் மகள் டாக்டர் கே.ஜி. ரஷ்யா, நாயுடு வகுப்பைச் சார்ந்த சித்தரஞ்சனைத் திருமணம் புரிந்தார். என்.டி. சுந்தர வடிவேலு - காந்தம்மாள் இருந்து நடத்தி வைத்தனர்.

5-1-70 அன்று, திருச்சி வானொலி சார்பில் மாறன் என்பார் பெரியாரைப் பேட்டி கண்டு, அந்தப் பெரிய, முழு அளவு உரையாடலும், ஒலிபரப்பானது. இது பின்னர், 1-3-70 “விடுதலை"யில்