கவிஞர் கருணானந்தம்
561
என்று 11-ந் தேதி பெரியார், கலைஞருக்கக் தந்தி அனுப்பினார். 12-ந் தேதி காலை எல்லா அமைச்சர்களும் வந்து தந்தை பெரியாருக்கு மாலை சூட்டினார்கள். பெரியாரோடு சேர்ந்து அனைவரும் அண்ணா சதுக்கம் சென்று மலர் வளையம் வைத்தனர். அண்ணா சிலை அருகே இராஜாஜி காமராஜர் படங்கள் நெற்றியில் பட்டை நாமத்துடன் விளங்கியதை மக்கள் அனைவரும் கண்டு நகைத்தனர். பத்திரிகை உலகம் படுத்தியபாட்டை நினைத்தோ என்னவோ, பெரியார், 1 தேதி ஏட்டில், சீக்கிரம் ஓர் ஆங்கில தினசரி துவக்கிட வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தார். இன்னொரு பெட்டிச் செய்தியில் அண்மையில் எடுக்கவிருக்கும் (Census) மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், எல்லாரும் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்றும், தங்களுக்கு ஜாதி இல்லை என்றும் தகவல் தருமாறு வேண்டுகோள் விடுத்தார் பெரியார்.
13-3-71 "விடுதலை"யில் இராஜாஜிக்குப் பதிலளிக்கும் தலையங்கத்தைப் பெரியார் தீட்டினார். “இது தேர்தல் அல்லவாம்!” என்பது தலைப்பு, "இது தேர்தல் அல்ல, அசிங்கமான பர்மிட், லைசன்ஸ், பணபலம் பெற்ற வெற்றிதான் என்கிறார் இராஜாஜி. இப்படி எழுத இவருக்கு மானம் வெட்கம் இல்லையா? அன்னக்காவடிப் பார்ப்பனர் எத்தனையோபேர் இன்று தொழிலதிபர் - கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார்களே யாரால்? எப்படி? நீங்கள் அதற்குள் கற்பனை மந்திரி சபை அமைத்தீர்களே, எந்த நம்பிக்கையில்? தோற்றுப் போனதோடு, தவறான காரணம் வேறா காட்டுகிறீர்கள்? என்னைப் பொறுத்தவரையில் இது சேலம் சம்பவத்துக்குக் கிடைத்த பாராட்டுதல் என்றே கருதுகிறேன். (அங்கே வெற்றி பெற்ற தி.மு.க எம்.எல். ஏ. இருவரில் ஒருவர் ராஜாராமன், இன்னொருவர் ஜெயராமன், தமிழர்கள் இனியும் ஏமாந்து சும்மாயிருக்கமாட்டார்கள். ஆகையால் நீங்கள் உங்கள் இனத்தாருக்கு இனியும் தவறான வழிகாட்டாதீர்கள்!" என்று.