570
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
17-9-71 அன்று பெரியார் சிலை ஈரோட்டில் நிறுவப்படும் என்றும் 26-9-71 அன்று சேலத்தில் அன்று சேலத்தில் வெள்ளிச் சிம்மாசனம் வழங்கப்படும் என்றும் முன்னதாகவே செய்திகள் வெளியாயின. லால்குடி வட்டம் திருமங்கலம் கிராமத்தில், பெரியார் மின்விளக்கேற்றிய போது. "பள்ளிகளில் தருவது போலக் கல்வரிகளிலும் மதிய உணவு தந்தால், நம் பிள்ளைகள் இன்னும் பலர் உயர்கல்வி பெற முடியும். இப்போது நடந்துள்ள மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் தேர்ந்தெடுப்பதில் 1,000க்கு 950 பேர் நம் பிள்ளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் இந்த ஆட்சியில், என்று மகிழ்ந்தார் பெரியார். “திராவிடர் கழகம் ஏற்பட்டது கடவுளை ஒழிப்பதற்காக அல்ல; இன இழிவை ஒழிப்பதற்குத்தான். ஆனால் நம் இன இழிவை ஒழிக்கும் பணியில் கடவுள் குறுக்கிடுவதால், அதை ஒழிக்க முற்படுகிறோம்" என்று பெரியார் தாதம் பேட்டை பழுவூரில் கூறினார்.
துவாரகையிலுள்ள சாரதா பீடம் சங்கராச்சாரியாரின் விழாவில் கலந்து கொள்ளத் துணை ஜனாதிபதி ஜி.எஸ். பாடக் மறுத்துவிட்டார்; காரணம், அவர் தீண்டாமையை ஆதரிப்பவர் என்பதால் இந்தச் செய்தியை "விடுதலை" வெற்றியுடன் பிரசுரித்தது. நாகரசம்பட்டி தன்மானக் குடும்பத்தின் தலைமை மூதாட்டியும் என்.வி. சுந்தரம் சகோதரர்கள், என்.வி. விசாலாட்சி அம்மாள் சகோதரிகள் ஆகியோரின் தாயாரும், என்.எஸ். சம்பந்தம் சகோதரர்களின் பாட்டியாருமான தாயாரம்மாள் 15-8-71 அன்று மறைந்தார். அவரது நினைவு நாளான 29-8-71 அன்று பெரியார், அம்மையாரின் படத்தினைத் திறந்து வைத்துத், தமது கொள்கையில் அன்னாருக்கிருந்த ஈடுபாட்டை நினைவு கூர்ந்தார்.