பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

577



மனிதன் தன்னுடைய நலத்தை மட்டுமின்றித் தாய், தகப்பன, பெண்டு, பிள்ளை முதலியோரின் நலத்தைப் பற்றியும் கவலை கொள்கிறான் என்றால், அதுவும் பெரிதும் சுயநலத்தை உத்தேசித்ததே ஆகும். மனிதன் ஏன் தன் மனைவியை அழகுபடுத்துகிறான்? தான் பயன்படுத்தும் மாடு கன்றுகளின் நலத்தை எதற்காகக் கவனிக்கிறான் தனது நாய்க்கு எதற்காக நல்ல போஷணை கொடுக்கிறான்? எதற்காகத் தான் குடியிருக்கும் வீட்டைப் பாதுகாக்கிறான்? எதற்காகத் தனது பணத்தைப், பொருளைப் பத்திரப்படுத்திப், பெருக்குகிறான்? ஓட்டல்காரன் எதற்காகத் தனது வாடிக்கைக்காரர்களுக்கு நல்ல சாப்பாடு போடுகிறான்? பத்திரிகைக்காரன் எதற்காக நல்ல, அதிசய, புதிய செய்திகளைப் கண்டு பிடித்துப் பிரசுரிக்கிறான்? வைத்தியன் எதற்காகத் தன்னிடம் வரும் நோயாளிகளையெல்லாம் சவுக்கியப்படுத்த வேண்டுமென்று கவலைப்படுகிறான்? வக்கீல் தன்னிடம் வரும் கட்சிக்காரர்களுக்கு அனுகூலம் ஏற்பட வேண்டுமென்று பல வழிகளிலும் பாடுபடுவது எதற்காக? தாசிகள் தங்களிடம் வருபவர்களிடம் தங்களுக்குத் காமம் இல்லாவிட்டாலும், எதற்காக மேல் விழுந்து இன்பமளிக்கிறார்கள்? இவர்கள் எல்லாரும் பிறர் நலத்தைப் பேணுவதாக நமக்குக் காணப்பட்டாலும், அவர்கள் பயனாய்ச் சுய நலம் அடைவதற்கேயாகும் என்பதில் அய்யமுண்டோ ? இது தெளிவாய்த் தெரிகிறதல்லவா? ஆதலால் ஜீவசுபாவமே சுயநலந்தான் என்பதில் சந்தேகமே இல்லை!

மனிதனுக்கு நலம் என்பவற்றுள் எல்லாம் தலைசிறந்த நலம் அவன் மனத்திருப்தியே ஆகும். பிறர் நலத்துக்காக அவன் செய்யும் காரியம், அவனுக்குப் பூரண திருப்தியளித்தால், அதுவே அவனது (சுய) நலமாகும்.

ஒரு மனிதன் தெருவில் நடக்கிறான். அங்கே ஓர் அழிந்து போன வேலிக்குள், பூஞ்செடியில், 6 அங்குல சுற்று வட்டமும் பல இதழ்களும் கொண்ட ஒரு ரோஜா மலர் இருக்கிறது. அது அவனுக்கு அதிசயமும், அழகும் நிறைந்த காட்சியாகக் காணப்படுகிறது. அங்கு யாரும் இல்லாததால், அவன் பறித்துக்கொண்டு போனால் யாரும் கேட்க மாட்டார்கள். பறித்துக்கொண்டு போய்த் தன் காதலிக்குத் தரலாம். ஆனால் அவன் நினைக்கிறான் - நாம் பறித்துச் சென்றால் இருவரும் தானே மகிழ முடியும். இந்த வேலியைச் செப்பனிட்டு, மலரை யாரும் பறிக்க முடியாமல் செய்தால், இவ்வழியே செல்லும் ஆயிரக்கணக்கானோர் மகிழ்ச்சியடைவார்களே - என்று! அவ்விதமே செய்கிறான். பலர் மகிழ்வதை அவன் கண்டு இன்பம் அனுபவிக்கிறானே - அது சுயநலமில்லையா?

ஒரு மனிதன், இன்னொருவன் பசியால் கஷ்டப்படும்போது, தனக்கு மட்டும் உள்ள உணவில் பாதியை அவனுக்குத் தந்து, அவன்