பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

598

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



சிறப்பாக நடந்தேறியது. முதல் நாள் பிரும்மாண்டமான ஊர்வலம், பல லட்சம் மக்கள் பங்கேற்றனர். இறுதியாகச் சிறப்புப் பேருரை ஆற்றிய முதல்வர் கலைஞர் அரைமணி நேரம் பேசியபின், உடல் நலிவுற்றுப் பேச்சை முடித்துக் கொண்டார். புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் முன்னதாகப் பேசும்போது, “மாநில சுயாட்சிபெறப் போராடுவோம்! நம்மை எதிர்த்து மத்திய அரசு இராணுவத்தை ஏவினாலும் சமாளிப்போம்" என்றார். முரசொலிமாறன் இந்த மாநாட்டின் தலைவர், மதுரை மேயர் எஸ். முத்து வரவேற்புக் குழுத் தலைவர்,

9-8-72 அன்று பெரியார் மதுரை மாநாட்டைப் பாராட்டித் தலையங்கம் வரைந்தார்: “மதுரை மாநாடுகள் வெற்றியுடன் நடந்ததை அறிந்து, இதற்குக் காரணமானவர்களை வாயார மனமாரப் பாராட்டுகிறேன். இது இவ்வளவு நல்லவண்ணம் நிறைவேறக் காரணம் தி.மு.க. ஆட்சியின் சிறப்பு என்றுதான் கூறவேண்டும். அரசு பகுத்தறிவுவழி மாறாமல் தன் பயணத்தை நடத்தி வருகிறது. கலைஞரின் திறமையான நிர்வாகத்தினால் நல்ல ஆட்சி நடைபெற முடிகிறது. கல்வித் துறையில் முன்னேற்றம், உணவுத் துறையில் பஞ்சம் இன்மை , போக்குவரத்து வசதிகள், சாலை அமைப்புகள், சிறு தொழிலுக்கு ஊக்கம், தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் கல்வியிலும் உத்தியோகத்திலும் நியாயமான விகிதாச்சாரம், ஏழை உழவர்களுக்கு நிலப்பட்டா வீட்டுமனைப்பட்டா வழங்குதல். இப்படி அடுக்கடுக்காய் நன்மைகள் குவிக்கிறார்கள். இந்த ஆட்சியைக் கண்போல் காப்பது நமது கடமையாகும்."

"கவர்னர் பதவி தேவையற்ற ஒன்று. எப்போதும் அவர்கள் டில்லியின் ஏஜண்டாகத்தான் பணியாற்றுவார்கள். இதுவரையில் எந்த கவர்னர் வந்தாலும், அவரது தனிக்காரியதரிசி பார்ப்பானராகவேதாள் இருக்கிறார்' என்று 7-ந் தேதி "விடுதலை"யில், ஆசிரியர் வீரமணியின் தலையங்கக் கட்டுரை வெளியானது.

வேடிக்கையான வேதனையான பெட்டிச் செய்தி ஒன்று “விடுதலை"யில் வெளியாகியிருந்தது. "ஈ.வெ.ரா. வேண்டுகோள். அன்புள்ள நண்பர் திருவண்ணாமலை பால கிருஷ்ணன் அவர்களே! நீங்கள் வீட்டை விட்டு வெளியேறி நாள் ஆகிவிட்டதாம். நீங்கள் எங்கிருந்தாலும் திருச்சி பெரியார் மாளிகைக்கு உடனே வாருங்கள். உங்களுக்கு என்ன குறை இருந்தாலும் நானே தக்கது செய்திறேன்,

உங்கள் நண்பன் ஈ.வெ. ராமசாமி

திருச்சி 12-8-72

13-7-72 அன்று கடலூரில் அரிய பெருவிழா. கெடிலம்