பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

599


பாலத்தருகில் பெரியார் சிலை திறப்புவிழா, மஞ்சகுப்பம் மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம். ஊரே மக்கள் திரளால் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி வழிந்தது. மாலை 5 மணிக்குத் தந்தை பெரியார் முத்துப்பல்லக்கில் அமர்ந்துவர, மக்கள் முழங்கிவரக், கடலலை போல் மனிதத்தலை அணி அணியாய் ஊர்ந்துவர, அழகுமிகு எழுச்சி ஊர்வலம் புறப்பட்டது வே இடையிடையே முதல்வர் கலைஞர். அமைச்சர்கள் ப.உ. சண்முகம் எஸ். இராமசந்திரன், சி.பி. சிற்றரசு, அன்பில் தர்மலிங்கம், ஆகியோர் பல்லக்கில் ஏறி அமர்ந்து கொண்டனர். ஊர்வலம் வரும் வழியில், அனைவரும் இறங்கி, தந்தை பெரியார் நிற்கும் பாங்கில் அமைக்கப்பெற்ற முழு உருவ வெண்கலச் சிலையினைக் கலைஞர் திறந்து வைக்க, மீண்டும் ஊர்வலம் முன்னேறி, நகராட்சி மன்றம் அடைய, அங்கே பெரியார், முதல்வர், அமைச்சர்கட்கு நகராட்சிமன்றம் வரவேற்பு வழங்கி, இரவு 9 மணிக்கு முடிக்க, பொதுக்கூட்டம் 9-30 மணிக்கு தொடங்கியது. மேலவைத்தலைவர் சிந்தனைச்சிற்பி சி.பி. சிற்றரசு தலைமை ஏற்றார். கண்காட்சியின் பகுத்தறிவுக் கோலத்தை மக்கள் கண்டு விழிப்புணர்வு பெறுமாறு, ப.உ. சண்முகம் திறந்து வைத்தார். வீரமணி - கடலூர்க்காரராயிற்றே - வரவேற்றார். மாவட்ட அமைச்சர் எஸ். இராமச்சந்திரன் 10,000 ரூபாய் பொற்கிழி பெரியார்பால் ஈந்தார்.

முதல்வர் கலைஞர் பேசும்போது, “சிக்காகோ பல்கலைக் கழகத்தில் பெரியாரின் நூல்களெல்லாம் இருந்தது காணப் பெருவியப்பும் மகிழ்ச்சியும் பெருமையும் உற்றேன். பெரியாரிடம் நாம் தரும் செல்வம் வீண்போகாது. மருத்துவமனையாக, கல்விச்சாலையாக மக்களுக்கே திரும்பிவரும்” என்றார். மேலும் “இன்று பெரியாருக்குச் சிலை. சிலை என்றால் வில் என்றும் ஒரு பொருளுண்டு. பெரியாரின் வில்லில் இருந்து புறப்பட்ட அக்கினியாஸ்திரம் அழகிரி; வருணாஸ்திரம் அண்ணா; நாகாஸ்திரம் சி.பி. சிற்றரசு; நான் என்ன அஸ்திரமோ நீங்களே முடிவு செய்யுங்கள்” என்றார். புதுவை முதல்வர் ஃபாரூக், அன்பில் தர்மலிங்கம், சிதம்பரம் டாக்டர் ரங்கசாமி, ஆர். கனகசபை, எம். செல்வராஜ் எம்.எல்.ஏ ஆகியோருக்குப்பின், பெரியார் சீருரை நிகழ்த்தினார். செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும் என்று, 1944 - 1972 இரு நிகழ்ச்சிகளுக்கும் eye witness ஆன கவிஞர் கருணானந்தம், கவிதையொன்று தீட்டியவாறு, பெரியார் சிலை பீடத்தில் குறிக்கப்பட்ட சொற்கள் மிகப் பெரிய வரலாற்று உண்மை ஒன்றை நினைவூட்டுகின்றன.

சரித்திரக் குறிப்பு

29-7-1944 அன்று தந்தை பெரியார் அவர்கள் மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட இதே இடத்தில், இன்று (13-8-1972) அவருக்கு