பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

608

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


திடலுக்கு வந்து எம்.ஜி.ஆர். பெரியாரைச் சந்தித்தார். “நீங்கள் பொறுப்பான பதவியில் இருக்கிறீர்கள். கட்சிக்கும் ஆட்சிக்கும் கேடுவராமல் காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமையல்லவா?” என்று கேட்டார் பெரியார். எம்.ஜி.ஆர். தனது நிலையை எடுத்துக்கூறி, பெரியார் கூறியது பற்றி ஆலோசிப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். அன்றே, பகல் 11.15 மணிக்கு முதல்வர் கலைஞரும், அமைச்சர்களான நாவலர், மன்னை நாராயணசாமி க. ராஜாராம் ஆகபயாரும் வந்து, இந்தியப் பிரதமர் பெரியாருக்கு வழங்கிய தாமிரப்பட்டய விருதினை நேரில் அளித்தனர். கலைஞர், பெரியாருக்கு ரோஜா மாலை சூட்டிப் பழங்களுடன் பட்டயத்தை ஒரு தாம்பாளத்தில் வைத்துப், பெரியாருக்குப் பணிவன்புடன் வழங்கினார். அதைவிடப் பணிவன்புடன் அதனைப் பெரியார் பெற்று மகிழ்ந்தார். அந்தப் பட்டயத்தில் இந்தி மொழியில் “பாரத விடுதலையின் 25 ஆண்டு நிறைவையொட்டி, பெரியார் ஈ.வெ. ராமசாமிக்கு, பாரதப் பிரதமர் ஸ்ரீமதி இந்திராகாந்தி, நாட்டின் சார்பில் வழங்குகிறார்” எனப் பொறிக்கப்பட்டிருந்தது. பெரியார், தாம் எம்.ஜி.ஆரை அழைத்துப் பேசியது பற்றி அவர்களிடம் விளக்கிக் கூறிவிட்டுத் திருச்சிக்கு வேனில் புறப்பட்டார். விழுப்புரம் அருகில் வேன் செல்லும்போது, எம்.ஜி.ஆர். ரசிகர்கள் எனப்படுவோர் வேனை வழிமறித்து, எம்.ஜி.ஆர். வாழ்க, கருணாநிதி ஒழிக என்று முழக்கமிட வற்புறுத்தினர். உள்ளே அமர்ந்திருந்த பெரியார் எழுந்ததும், அனைவரும் ஓடிவிட்டனர்.

11-ந் தேதி தொடங்கிய நாடெங்கும் இப்படிப்பட்ட அமளி ஆர்ப்பாட்டங்கள் நிறைய நடைபெற்றன. 14-ந் தேதி வரை 1,625 பேர் இதனால் கைதாகியிருப்பதாக முதல்வர் செய்தி தந்தார். 17-ந் தேதி கே.ஏ. கிருஷ்ணசாமி எம்.பி., தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அடியோடு நீக்கப்பட்டார். அமைச்சர் மாதவன் பேசும்போது “எம்.ஜி.ஆர். தனக்கு அமைச்சர் பதவி கேட்டார். நடிப்பதை நிறுத்திக் கொண்டால் தருவதாகச் சொல்லப்பட்டது. அதனால் விலகி விட்டார்” என்றார். 18-10-72 அன்று எம்.ஜி.ஆர்., தான் தி.மு. கழகத்திலிருந்து விலகிவிட்டதாகவும், புதுக்கட்சி துவங்கிவிட்டதாகவும் அறிவித்ததால், இவர் முன்பு கேட்டது கணக்குப் பார்க்க அல்ல, கணக்குத் தீர்க்கத்தான் என்பது புரிந்தது. “விடுதலை” தொடர்ந்து மூன்று நாள் தலையங்கத்தில் “புதுக் கட்சி என்ற பூனைக்குட்டி வெளியே வந்தது” என விளக்கமாக எழுதியிருந்தது. பெரியார் 11-ந் தேதியே சூசகமாய்க் குறிப்பிட்டதையும் எடுத்துக் காட்டிற்று. இந்திரா காங்கிரசின் கட்சித் தலைமை எதிர் பார்த்தவாறே