பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

618

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


நிறைவேறியும், அவர் தலைவர் நாற்காலியை விடாமல் உட்கார்ந்திருந்தார். எனவே வேறுவழியின்றி, இன்னொரு நாற்காலி போடப்பட்டு, அதில் துணை சபாநாயகர் பெ. சீனிவாசன் அமர்ந்து, சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்த நேரிட்டது. 4-ந் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் பெ.சீனிவாசன் தலைமையில், கலைஞர் அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கு கோரப் பெற்றபோது ஆதரவாக 172, எதிர்ப்பாக 0 வாக்குகள் என அறிவிக்கப்பட்டது.

1.12.72 அன்று மதுரையில் பெரியார் பேசும்போது, “எல்லாத் துறைகளிலும் மலையாளிகளின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட ஒரு திட்டம் வகுத்தாக வேண்டும். அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் திராவிடர் கழகம் மாநாடு நடத்தும்” என்றார். கரூரில் பெரியார் “தி.மு.க. சாதனைகளால் மற்றக் கட்சிகளின் வாழ்வே அஸ்தமித்து விட்டது. அதனால்தான் ஒழிக்கக் கிளம்பிவிட்டனர். பார்ப்பனர் அதிகார வர்க்கம் தி.மு.க.வால் ஒழிக்கப்பட்டது. அதனால் தான் கவிழ்ப்பில் இறங்கியுள்ளனர்” என்று தெளிவுபடுத்தினார்.

“உண்மை” மாத இதழ் இனி சென்னையிலிருந்து வெளிவரும். ஆண்டுச் சந்தா 5 ரூபாய் என்று பெரியார் பெயரில் “விடுதலை” 2.12.72 ஏட்டில் செய்தி பிரசுரமாயிற்று. தாழ்த்தப்பட்டோரின் சம்பந்தியாக முதல்வர் கலைஞர் மாறியது 10.12.72 அன்று. அவரது இரண்டாவது மகன் அழகிரிக்கு, அமைச்சர் ஓ.பி. இராமனின் மைத்துனியும், காராளரின் இரண்டாவது மகளுமான காந்தியை அன்றைய தினம் வாழ்க்கைத் துணையாக இணைத்து வரலாறு படைத்தார். நாவலர் தலைமையில், பெரியார், அமைச்சர் ஜெகஜீவன்ராம் முன்னிலையில், பெரியார் திடலில் திருமணம்! அவரவர் வீட்டில் சாப்பாடு மத்திய அமைச்சர் காலந்தாழ்ந்து 12 மணிக்குத்தான் வர இயன்றதால், நேரே கலைஞரின் இல்லத்திற்கே வந்துவிட்டார். பெரியாரும் அங்கே சென்றிருந்து, சந்தித்து மகிழ்ந்தனர் முன்னதாக மணமக்களைக் காமராஜர், எம்.ஆர். கிருஷ்ணா (மத்திய துணை அமைச்சர்), பிரம்மானந்தரெட்டி, கே.கே.ஷா, நீதிபதி கே. வீராசாமி, மோகள் குமாரமங்கலம், கவிஞர் கண்ணதாசன், டாக்டர் ஹண்டே , சி.பி. சிற்றரசு, ம.பொ. சிவஞானம், ஏ.ஆர். பெருமாள், அப்துல்வகாப் ஜானிபாய், சத்தியவாணிமுத்து ஆகியோர் வாழ்த்தினர். மாலையில் ஓய்.பி. சவான், ஓம் மேத்தா, இல்லத்துக்கு வந்து மணமக்களைக் கண்டு சென்றனர்.

எம்.ஜி.ஆர்., எம்.கல்யாண சுந்தரம் ஆகியோர், கலைஞர் மற்றும் சில அமைச்சர்கள் மீது தந்திருந்த புகார்ப்பட்டியல் பிரதம மந்திரி வழியாக, முதலமைச்சருக்கு அனுப்பிவைக்கப் பட்டிருந்தது. அந்தப் புகார் பட்டியலின் பிரதியும் அதற்கான