பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

619


பதில் விளக்கமும் புத்தக உருவில் அச்சிடப்பட்டு 14.12.72 அன்று பிரதமருக்கு அனுப்பப்பெற்றது. சட்டமன்றத்திலும் வைக்கப்பட்டது. 15.12.72 முதல் 5.1.73 வரை தொடாந்து 22 நாட்களும் இவற்றை “விடுதலை” வெளியிட்டு வந்தது.! 19.12.72 அன்று சென்னையில் கலெக்டர்கள் மாநாடு நடைபெற்றது. வெள்ளச் சேதம், நிவாரணப்பணிகள் பற்றி ஆராய்ந்து, துயர் துடைப்புக்காக 25 கோடி ரூபாய் தேவை என்றும், இப்போது 4 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் முதல்வர் நிருபர்களிடம் அறிவித்தார். மேலும் அவர் “வெள்ளச் சேதத்தால் பெற்றோரை இழந்து அநாதையான குழந்தைகள் 5, அவற்றில் அறநிலையைத் துறை பொறுப்பேற்றுக் கொண்டது. பெரியார் முன்வந்து மனமுவந்து தத்தெடுத்துக் கொண்ட குழந்தை1, முன்பு கோயில்கள் செய்து வந்த வேலையை, இப்போது பெரியார் மேற் கொண்டுள்ளார். இது பெரியாரின் அன்பு உள்ளத்தைக் காட்டுவதாகும் என்றார்.”

21.12.72 அன்று மூதறிஞர் இராஜாஜியின் உடல் நிலை மிக்க கவலைக்கிடமாகி விட்டதால், சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். 24ந் தேதி பெரியாரும் மணியம்மையாரும் திண்டிவனத்திலிருந்து நேரே 2.45p.m. மணிக்குத் திடலுக்கு வந்து சேர்ந்தனர். இராஜாஜி உடல் நலக் குறைவு பற்றி விசாரித்த பெரியார், வேனிலிருந்து இறங்காமலேயே மருத்துவமனை சென்று, தம் நீண்டகால நண்பரைப் பார்த்து வந்தார். 25-ந் தேதி காலையிலும் மாலையிலும் பெரியாரும் மணியம்மையாரும் மீண்டும் சென்று பார்த்து வந்தனர். “எவ்வளவோ கருத்து வேறுபாடு எங்களுக்கிடையே இருந்தாலும், எங்கள் நட்பு ஆழமானது. ஒருவருக்கொருவர் மாறாத தன்மை கொண்டது” என்று நிருபர்களிடம் கூறினார் பெரியார்.

மருத்துவர்களின் அரிய முயற்சிகள், அமைச்சர்களின் அரிய கவனிப்பு, அன்பர்களின் உரிய பேரார்வம் அனைத்தையும் மீறி, மூதறிஞர் இராஜாஜி அவர்கள் 25.12.72 அன்று மாலை 5.44 மணிக்கு மரணமடைந்தார்கள். அன்னாரின் சடலம் இராஜாஜி மண்டபத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மறுநாள் குடி அரசு தினம் ஆகையால் 27ந் தேதி கிருஷ்ணாம் பேட்டையில் தகனம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. முதல்வர் கலைஞரின் தனி முயற்சியால், கிண்டி, காந்தி மண்டபத்தை அடுத்த காலி மனையில், காத்தியடிகளின் சகாவும் சம்பந்தியுமான சக்கரவர்த்தி இராது கோபாலாச்சாரியாருக்கு, எட்டுக் கோண நினைவு மண்டபம், உச்சியில் மணிக்கிரீடம் ஆகியவை பின்னர் அமைக்கப்பட்டன.

சென்னை 114வது வட்டத்தில் பேசிய பெரியார், “யார் யாரோ யாரையோ கணக்குக் கேட்கின்றார்களே- பிரதமர் அம்மையார் கட்சியின் தேர்தல் செலவுக் கணக்கு என்ன? கோடி கோடியாய்ச் செலவு