கவிஞர் கருணானந்தம்
619
21.12.72 அன்று மூதறிஞர் இராஜாஜியின் உடல் நிலை மிக்க கவலைக்கிடமாகி விட்டதால், சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். 24ந் தேதி பெரியாரும் மணியம்மையாரும் திண்டிவனத்திலிருந்து நேரே 2.45p.m. மணிக்குத் திடலுக்கு வந்து சேர்ந்தனர். இராஜாஜி உடல் நலக் குறைவு பற்றி விசாரித்த பெரியார், வேனிலிருந்து இறங்காமலேயே மருத்துவமனை சென்று, தம் நீண்டகால நண்பரைப் பார்த்து வந்தார். 25-ந் தேதி காலையிலும் மாலையிலும் பெரியாரும் மணியம்மையாரும் மீண்டும் சென்று பார்த்து வந்தனர். “எவ்வளவோ கருத்து வேறுபாடு எங்களுக்கிடையே இருந்தாலும், எங்கள் நட்பு ஆழமானது. ஒருவருக்கொருவர் மாறாத தன்மை கொண்டது” என்று நிருபர்களிடம் கூறினார் பெரியார்.
மருத்துவர்களின் அரிய முயற்சிகள், அமைச்சர்களின் அரிய கவனிப்பு, அன்பர்களின் உரிய பேரார்வம் அனைத்தையும் மீறி, மூதறிஞர் இராஜாஜி அவர்கள் 25.12.72 அன்று மாலை 5.44 மணிக்கு மரணமடைந்தார்கள். அன்னாரின் சடலம் இராஜாஜி மண்டபத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மறுநாள் குடி அரசு தினம் ஆகையால் 27ந் தேதி கிருஷ்ணாம் பேட்டையில் தகனம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. முதல்வர் கலைஞரின் தனி முயற்சியால், கிண்டி, காந்தி மண்டபத்தை அடுத்த காலி மனையில், காத்தியடிகளின் சகாவும் சம்பந்தியுமான சக்கரவர்த்தி இராது கோபாலாச்சாரியாருக்கு, எட்டுக் கோண நினைவு மண்டபம், உச்சியில் மணிக்கிரீடம் ஆகியவை பின்னர் அமைக்கப்பட்டன.
சென்னை 114வது வட்டத்தில் பேசிய பெரியார், “யார் யாரோ யாரையோ கணக்குக் கேட்கின்றார்களே- பிரதமர் அம்மையார் கட்சியின் தேர்தல் செலவுக் கணக்கு என்ன? கோடி கோடியாய்ச் செலவு