பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

634

பகுத்தறிவு பகலவன் தந்தை


யாருக்கு, அரசினர் பொது மருத்துவ மனையில், டாக்டர் சரத்சந்திரா, ஹெர்ணியா ஆப்பரேஷன் செய்து, அம்மா நலமடைந்து வந்தார்.

1.6.73 அன்று பெரியாரின் கார் நிதிக்காகத் தஞ்சையில் பெரியாரிடம் 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. 5ந் தேதி கரூர் நகராட்சி, பெரியாருக்கு வரவேற்பு வழங்கியது. நகர தி.க பெரியாரின் கார் நிதிக்காக 5,000 ரூபாய்தந்தது 6ந் தேதி சேலம் 4,500 ரூபாய் அன்பளிப்பாய்த் தந்தது."விடுதலை" ஏடு 6.6.73 அன்று 36ம் வயதை எட்டிப் பிடித்தது திருமண விழாக்களில் பெருமளவாகப் பங்கேற்ற பெரியார், பெண்களின் அடிமைத்தனத்தை நாம் இன்னும் பேணுவதைச் சுட்டிக் காட்டிக் கண்டித்து, அவரவர்களே, மாப்பிள்ளை தேடிக் கொள்ளவேண்டும். 22வயது அடைந்த பின் திருமணம் செய்து கொள்வது நல்லது. அதிலும், பெண்கள் ஏதாவது வேலை செய்து, தம் காலில் நிற்கவும் பழக வேண்டும். மேலும், எதற்கெடுத்தாலும் பார்ப்பானைத் திட்டுவதால் மட்டும், அல்லது மதவாதிகளைப் பழைமை வாதிகளைக் கண்டிப்பதால் மட்டும், பயனேற்பட்டுவிடாது! கடவுள், மத சம்பிரதாயம், மூட நம்பிக்கைகளை விட்டொழிக்க வேண்டும் - என்று அறிவுறுத்தினார்.

8.6.73 அன்று காலை 10 மணிக்குத் திருசெங்கோட்டில் அண்ணா சிலையினைத் திறந்து வைத்தபோது - எதிரிகள் முளைக்க வேண்டுமானாலும் அண்ணா பெயரைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது என்று இடித்துக் காட்டினார் பெரியார். கலைஞரும், நாவலரும் தி.மு.கவில் தலைவர், பொதுச் செயலாளர், பொறுப்புகளிலிருந்து விலகி, மன்னை நாராயணசாமியைக் கட்சிப் பொறுப்பில் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் போவாதாக 13.6.73 ஒரு செய்தி. அமைச்சர் பதவி விலக மன்னை சம்மதித்து விட்டாராம். 15ந் தேதி “விடுதலை"யில் இது சம்பந்தமான பெரியதொரு பெட்டிச் செய்தி இடம் பெற்றது; பெரியார் திருச்சியிலிருந்து அனுப்பிய எழுத்தாகும் இது:- “திண்டுக்கல்லில் தி.மு.க தோல்வி அடைந்ததனால், கட்சியின் தற்போதைய தலைவரும், பொதுச் செயலாளரும் அந்தந்தப் பதவிகளிலிருந்தும் விலகி, வேறு ஒருவர் புதிய பொதுச் செயலாளராகும் ஒரு மாறுதல் செய்வது என்று உத்தேசிக்கப்பட்டுள்ளதாகப் பத்திரிகைகளில் பார்த்தேன். அந்தப்படிக்கான ஒரு மாறுதல் ஏற்படுவதனால், பெரிய பலன் ஏற்பட்டுவிடும் என்றும் நான் நினைக்கவில்லை. மாறாக, இம்மாறுதல் மூலம் பொது மக்கள், கட்சித் தலைமையிடம் ஏதோ பெரிய குறை இருப்பதாகத் தவறாக எண்ணக்கூடும். இது இன்றைய எதிரிகளுக்கு ஒரு வாய்ப்பாக ஆகிவிடும். மற்றபடி திண்டுக்கல் தோல்வி, அப்படி ஒரு கட்டுமீறிய அசாதாரண நிலை என்று. அளவுக்கு மீறிக் கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல!"