பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

665


முட்டாள் பயல் என்று சொல்லுகிறானே இது என்னடா? என்று சில பேருக்குக் கோபம் வரலாம்.

கடவுள் சங்கதியை எடுத்தால் ஒருவனுக்கும் ஒருவன் நம்பிக்கைக்காரனும் நம்பிக்கை இல்லாதவனும் - அவனை இவள் முட்டாள் என்று சொல்லியாகணும், இவனை அவன் முட்டாள் என்று சொல்லித் தான் ஆகணும். ஆனாலும், நாங்கள் பகுத்தறிவை அடிப்படையாக வைத்துக் கடவுள் சங்கதி பேசுகிறதினாலே, கொஞ்சம் மரியாதையாக மானத்தோடு பேசுவோம். பகுத்தறிவு இல்லாதவர்கள் கொஞ்சம் கடுமையாகத்தான் பேசுவார்கள்; நம்மைவிட மோசமாக!

உதாரணமாகச் சொல்லுவேன், நாலாயிர திவ்யப்பிரபந்தம் பாடிய ஆழ்வார்கள், தேவார திருவாசகம் பாடிய நாயன்மார்கள் இவர்களைவிடக் கேவலமாக நாங்கள் சொல்லுவதில்லை; இதை மனத்திலே வையுங்கள். நாங்கள் இவனையோ, இவன் புத்தியையோதான் திட்டுவோம். இவனோ அவர்களது பெண்டாட்டி பிள்ளைகளையெல்லாம் திட்டுகிறான். தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்பவன், கடவுள் இல்லை என்கிறவனை எல்லாம் வெட்டு, வெட்டு என்கிறான். பாட்டிலேயே இப்படி என்றால், காரியத்திலே எப்படி? தேவாரம் பாடினானே சம்பந்தர் என்பவன், கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டியுடன் நான் சேரணும். “இசைத்து வை” என்று கடவுளையே கேட்கிறான். இவன் பக்தனாம், அயோக்கியப்பயல்! |

கடவுளைப் பற்றி அறிவைக் கொண்டு ஆராய்ந்து பாருங்கள்; சிந்தியுங்கள் என்றுதான் சொன்னான் புத்தன். அவனை வெட்டி, தலை வேறு முண்டம் வேறாகக் குவித்தார்கள். எல்லாமே கோயிலிலே சிற்பமாகச் சித்திரமாக அடித்து வைத்திருக்கிறானே. இன்னொரு அயோக்கியக் கூட்டம் சைவர்கள், 8,000 பேரைக் கழுவிலே நிர்வாணமாக்கி ஏற்றினார்கள் சமணர்களை, இதற்கும் புராணம் எல்லாம் இருக்கிறது.

மற்றும் இன்றைய தினம் அரசியலிலே இருக்கிற அயோக்கியர்களோ, அரசியல் சட்டம் செய்த காலத்திலே நம்மையெல்லாம் தாசி மக்கள், சூத்திரர்கள் என்று எழுதினார்கள். இந்தியாவில் உள்ள கிறிஸ்தவன், முஸ்லீம் பார்சி தவிர மற்றவனெல்லாம் இந்துவாம். இந்துவிலே 100க்கு 2% பேராக இருக்கிற பார்ப்பான் தவிர, பாக்கி 97¼ பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்று சட்டத்திலே எழுதி வைத்திருக்கிறான். என்ன காரணம் அவனைத் திரும்பக் கேட்காதது தான் காரணம்

நமது பெண்டுபிள்ளைகளை விட்டு, அரசியல் சட்டத்தைத் தெருவிலே போட்டுச் சீவுகட்டையால் குத்தினால், ஏன் என்று