பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

668

பகுத்தறிவு பகலவன் தந்தை



நம்முடைய கடவுள் என்கிறான், நம்முடைய மதம் என்கிறான், நம்முடைய சாஸ்திரம் என்கிறான், நம்முடைய மனுதர்மம் என்கிறான், என்ன என்று தெரியாது. ரூபாய்க்கு எத்தனை படி என்று கேட்போம். ஒன்றுமே தெரியாமல் ஏன் என்ன எப்படி என்று கேட்காமல், எல்லாம் நம்முடையது என்று அவன் சொல்லுவதால் அடிமையாக இருந்து, ஏற்றுக் கொள்ளுகிறோம்.

இப்போது நாங்கள் வந்து, இந்த பிரச்சனையிலே, கடவுளைக் கும்பிடாதீர்கள் என்று சொல்லவில்லை. கடவுள் இருக்கிறதாக நினைக்காதிர்கள் என்று சொல்லவில்லை. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். கடவுள் என்றால் என்ன என்று சொல்லுங்கள் - அவ்வளவுதான் நாங்கள் சொல்லுகிறோம். ஒன்றுமேயில்லாமல், எந்த முட்டாளோ சொன்னான் என்பதற்காக, மரம் மட்டை பாம்பு பல்லி வரையில் கடவுள் என்றால், அது முட்டாள் தனம், பைத்தியக்காரத்தனம் ஆகாதா? இவ்வளவும் பண்ணியும் இன்னும் தேவடியாள் மகன் என்ற பட்டம் நம் தலைமேல் அல்லவா இருக்கிறது!

ஆகவேதான் எந்தச் சங்கதி எப்படி ஆனாலும், இப்போது நாம் ஆரம்பித்துள்ள இழிவு ஒழிப்புக் கிளர்ச்சிக் காரியம் மிகவும் ஞாயமானது என்பதற்கு, நான் உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன். இப்போது மகாநாடு நடந்து 10 நாள் ஆகிவிட்டது. பத்தாயிரக் கணக்கிலே மக்களும், 30க்கு மேலே பத்திரிக்கைக்காரர்களும் வந்தார்கள். சேதி பரவிவிட்டது. யாராவது இதுவரையில் எதிர்த்துப் பேசினார்களா? இல்லை, நாம் பண்ணினது அவ்வளவு நேர்மையான காரியம். எவன் சொல்லுவான் நான் தேவடியாள் மகனாகத்தான் இருக்கணும் என்று? நாம் தயாராய் இருக்கிறோம். அப்புறம் அவன் பரிகாரத்துக்கு வரணும். நீ போப்பா வெளியே உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீ 2,000 மைலுக்கு அப்பால் இருக்கிறாய்; உன் பேச்சு வேறே; உன் பழக்கவழக்கம் வேறே, உன் நட்பு வேறே!

(இந்த இடத்தில் பெரியாருக்கு நோய்க்கொடுமை மிகுந்தது. வலி பொறுக்க முடியாமல் சிறிது நேரம் ம்.ம். அம்மா . ஆ.ஆ. அம்மா . என்று துடிக்கிறார். பின் இயல்பாகவே பேசுகிறார்.)

நீ மரியாதையாகப் போய்விடு. ரகளை வேணாம். நீ இல்லா விட்டால் எங்களுக்கு என்ன நஷ்டம்? உப்பு இல்லையா, தண்ணி இல்லையா, காடு இல்லையா, மலை இல்லையா, நெல் கம்பு விளையவில்லையா? நீ எங்களுக்கு இதுவரை பண்ணின நன்மை என்ன? மரியாதையாகப் போ.

இவ்வளவுதானே நாம் சொல்லப் போகிறோம்? 25ந் தேதி ஆரம்பிப்போம். மளமளவென்று சொல்கிறபடி நடக்கணும். நாம் கலகத்துக்குப் போக மாட்டோம். எவனையும் கையாலே தொட-