பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

673


 

தமிழ்நாடு
அச்சு
1973

பதிவெண் :
எம் 1
(வீலை 4 பை)

தமிழ்நாடு  அரசிதழ்

சிறப்பு வெளியீடு
ஆணைப்படி வெளியிடப்பட்டது


எண்.2 சென்னை, திங்கட்கிழமை 1973 ஆம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 24ஆம் நாள்
[ மார்கழி 10 பிரமாதீச (2004 - திருவள்ளுவர் ஆண்டு) ]


பகுதி II – பிரிவு I

அரசாங்க அறிவிக்கைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு
பொதுத் [அரசியல்] துறை

பெரியார் திரு.ஈ. வெ. ராமசாமி அவர்கள் மறைவு

அரசு ஆணை எண் 3398 நாள் :—24–12–73

இந்திய நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்த வாதியான பெரியார் – திரு. ஈ. வெ. ராமசாமி அவர்கள் வேலூரில் 24–12–1973ஆம் நாள் காலை 7–40 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை தமிழ்நாடு அரசு மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றது. சமுதாயத் தளைகளையும், சாதி வேறுபாடுகளையும் நீக்குவதில் அவர் ஆற்றிய அரும்பணியை அரசு பெரிதும் பாராட்டுகிறது. மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் முறையில் இன்று துக்க நாளாக அனுசரிக்கப்படுமென்றும், பொது விடுமுறை என்றும் அரசு அறிவிக்கின்றது.

தமிழ்நாடு அரசு அலுவலகங்களும், கல்வி நிலையங்களும் இன்று மூடப்பட்டிருக்கும். தேசியக் கொடிகள் இன்றும் (24—12—73), நாளையும் (25—12—73) அரைக்கம்பத்தில் பறக்கும். 25—12—73 அன்று இறுதி ஊர்வலம் சென்னையில் நடைபெறும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

ப. சபாநாயகம்
தலைமைச் செயலாளர்