பக்கம்:தனி வீடு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் 95

அதில் சிற்றில் பருவத்தில் ஒரு பாட்டு வருகிறது. சின்னஞ் சிறு குழந்தையாகிய எம்பெரும்ான், பெண் பிள்ளைகள் கட்டிய வீடுகளைக் காலால் சிதைக்கிருன். அதைக் கண்டு அந்தக் குழந்தையாகிய எம்பெருமானிடம், எங்கள் சிற்றிலைச் சிதைக்கவேண்டாம்' என்று சொல்கிருர்கள். :சிறியேம் சிற்றில் சிதையேலே' என்று முடியும் பாடல் கள் அந்தப் பருவத்தில் உள்ளன. அந்தக் குழந்தைகள் சொல்வதாக ஒர் அழகான கற்பனையைப் பிள்ளையவர்கள் அமைத்திருக்கிருர்கள். - -

முருகனைப் பார்த்து அந்தக் குழந்தைகள் சொல் கிரு.ர்கள்: எம்பெருமானே, உன்னுடைய தாயாகிய பார்வதி தேவி எங்களைப் போன்ற பெண். ஆகையால் முன் காலத்தில் எங்களுக்கு ஒரு நன்மையைச் செய்திருக் கிருள். சரவணப்பூம் பொய்கையில் முதல் முதலாக உன்னைக் கானும் பொருட்டுச் சிவபெருமான் பார்வதி "யுடன் வந்தான். அம்மை உன்னைக் கண்டவுடன் அன்பு மிகுந்து ஆறு குழந்தைகளாக இருந்த உன்னே அப்படியே எடுத்து அணேத்தாள். தாமரைப் பூக்களில் தனித்தனிக் குழந்தையாக ஆறு உருவம் எடுத்து நீ விளையாடிக்கொண் டிருந்தாய். அந்தப் பெருமாட்டி சேர்த்து ஒர் உருவாக்கிய தால் கந்தன் என்ற திருநாமத்தை நீ பெற்ருய். அப்போது ஆறு குழந்தைகளும் ஒன்ருகிய திரு உருவத்தில் காட்சி அளித்தாய். அந்தக் கோலத்தில் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் அமைந்தன. எம்பெருமாட்டி முகம் ஆறினுக்கு ஏற்பக் கை ஆறிரண்டு செய்தது போலக் கால் ஆறிரண் டையும் அப்படியே வைக்கவில்லை. இரண்டு கால்களே இருக்கும்படி அருள் பாலித்தாள். இப்படிப் பார்வதிதேவி செய்ததற்குக் காரணம், நாங்கள் சிற்றில் இழைத்தால் பன்னிரண்டு கால்களும் துன்புறுத்தும் என்பதை எண்ணித்தான் இருக்கவேண்டும். உண்மையில் இப்போது இரண்டு கால்கள் இருந்துங்கூட அவை பண்ணுகின்ற குறும்பு பொறுக்க முடியாமல் இருக்கிறதே!' என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/105&oldid=575916" இலிருந்து மீள்விக்கப்பட்டது