பக்கம்:தனி வீடு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டர் பெருமை f 19

கார் வசதிகளை அதிகமாக்கிக் கொள்கிருன் பழங்காலத்தில்

கார் என்ற வாகனம் இல்லாவிட்டாலும் தேர் இருந்தது;

யானே இருந்தது; குதிரை இருந்தது. குதிரையில் செல் பவன் சிறிய பணக்காரன். யானையில் செல்கிறவன் பெரிய

பணக்காரன். தேரில் செல்கிறவன் எல்லோரையும்விடிப், பெரிய பணக்காரன். தேர், யானை, குதிரை என்ற மூன்று.

வாகனங்களையும் பழங்காலத்தில் சிறந்தனவாகப் போற்றி

ர்ைகள். அரசர்களிடம் இந்த வாகனங்கள் இருந்தன.

இந்த வாகனங்களைச் சுகமாக வாழ்வதற்கு வைத் திருந்ததோடு பிறருடைய காட்டைப் பற்றிக் கொள்வதற் கும், தம்மேல் பகைவர்கள் படை எடுத்தால் எதிர்ப்பதற் கும் உரிய படைகளாகவும் வைத்திருந்தார்கள். தேர், குதிரை, யானே, காலாட்படை என்னும் கான்கையும் சதுரங்க சேனை என்பார்கள். யானே முதலிய படைகள் யாரிடம் மிகுதியாக இருக்கின்றனவோ அவர்களைப் பெரிய அரசர்கள் என்று மக்கள் மதித்தார்கள். இன்று பணம் படைத்த மேலே நாடுகள் பணத்தைக் கொண்டு பலத்தை அதிகப்படுத்திக் கொள்வதைப் பார்க்கிருேம். பலபல புதிய படைக்கருவிகளைப் பெருக்கிக் கொள்கின்றனர். அந்தக் காலத்தில் தேர் முதலியவற்றைப் பெருக்கிக் கொண்டார்கள். இந்தக் காலத்தில் அணுக்குண்டு, ஹைட்ரஜன் குண்டு முதலியவற்றைப் பெருக்கிக் கொள் கிருர்கள். தம்மிடத்தில் உள்ள செல்வம் போதாது என்று பிறருடைய செல்வத்தை அடித்துக்கொள்ளும் பொருட்டுப் படைகளே மிகுதியாக்குவது ஆசை உடையவர்களுடைய செயல். பிற நாடுகளையும் வென்று அவற்றுக்கும் தாம். தலைவராக வேண்டுமென்று மன்னர்கள் நினைத்தார்கள். படை பெருகுவதற்குக் கார்ணம் இந்தப் பேராசையே. வேறு ஒருவன் தன் காட்டைக் கைக்கொள்வான் என்ற பயத்திலும் படையைப் பெருக்கிக் கொள்வது உண்டு, இவ்வாறு இரு திறத்தாலும் படைகள் மிகுதியாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/129&oldid=575940" இலிருந்து மீள்விக்கப்பட்டது