பக்கம்:தனி வீடு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தனி வீடு

இருக்கின்றவன் எம்பெருமான். அவனுடைய திருவருள் கிடைத்தால் நன்மை உண்டாகும்.

முயற்சியும் இறைவன் கருணையும்

இறைவன் ஞானமே வடிவமாக உடையவன்; ஞானத் திற்கு இருப்பிடம். அவன் தன்னுடைய குழந்தைகளாகிய மக்களுக்கு ஞானம் தருவதற்கு எப்போதும் சித்தமாக இருக்கிருன். ஆனல் முயற்சி இல்லாதவனுக்கு எத்தனே கொடுத்தாலும் அது பயன் அற்றதாகப் போய்விடும். அதன் பெருமை அவனுக்குத் தெரியாது. சீரணம் பண்ணிக்கொள்ள முடியாத ஒரு பொருளேக் குழந்தைக் குக் கொடுத்து, அதனே உண்டால் அது குழந்தையின் வயிற்றை நாசம் ஆக்கிவிடும். அப்படியின்றிச் சீரணிக்கும் ஆற்றல் உடைய குழந்தையால்ை அந்தப் பொருளால் இன்பத்தைப் பெறலாம். அப்படியே முயற்சி செய்யும் மனிதனுக்கு ஆண்டவன் தன்னுடைய அருளேக் கொடுத் தால் அது பயனே உண்டாக்கும். r

இப்படிச் சொல்வதல்ை இறைவன் நம்முடைய முயற். சியின் அளவைக் கொண்டு அதற்கு ஏற்றபடி அருள்கிருன் என்று கொள்ளக் கூடாது. முயற்சி எதுவும் இன்றிச் சும்மா இருந்தால் அவன் அருள் கிடைக்காது. நல்ல முயற்சி பண்ணத் தொடங்கில்ை அவன் நம்மிடத்தில் பெருங் கருணை கொண்டு பெரிய பயனேத் தருவான்.

தாயின் கருணை

இாயினுடைய பெருமை அத்தகையது. குழந்தை ஏதேனும் ஒரு சிறிய முயற்சி செய்தால் அதனைப் பெரி தாகப் பாராட்டுகிறவள் அவள் . அதுவும் செயல் செய்ய முயல்கிறதே என்பதல்ை மிக்க மகிழ்ச்சி அடைகிருள்.

சப்பாணியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் குழந்தை தளர்நடை பழகும்போது அதனுடைய தாய் அந்த நடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/36&oldid=575847" இலிருந்து மீள்விக்கப்பட்டது