பக்கம்:தனி வீடு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 . தனி வீடு

ஊற்று உள்ளத்தை அழித்து விடுகிறது; அல்லது உள்ளமே அதில் கரைந்து இல்லாமல் போய்விடுகிறது.

3. புவனம் ஏற்றுதலாவது, அவனளவிலே புவனத்தின் கினேப்பே இல்லாமல் டோய்விடுகிறது. அவன் அடைகிற ஆனந்தம் இட எல்லைக்கு அப்பாற்பட்டது. புவனங்களே எற்றிப் பரந்து நிற்பது. பிரபஞ்சத்தில் வாழ்ந்தாலும்

அதனேக் கடந்து கிற்கிருன். இதைத்தான், புவனம் எற்றி: என்று சொல்கிருர்.

(3) அடையாளம்

இனிமேல் சொல்வதுதான் சற்று விசித்திரமாகத் தோற்றும். எல்லாம் போய்ப் பிரபஞ்சத்தை எற்றிவிட்ட பிற்பாடு அந்தப் பரமானந்த வெள்ளத்தின்மேல் ஓர் அமுதம் தோன்றியது என்று சொல்ல வருகிருர்.

பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த்

தித்தித் திருக்கும் அமுது கண்டேன். . கோயிலில் நான் ஆறுமுகமும், பன்னிரண்டு தோள்களும் உடைய பெருமாகைக் கண்டேனே! அந்தப் பெருமான அங்கே கண்டேன்' என்கிருர். இது வியப்பதற்குரிய செய்தி. கோயிலில் கண்ட அந்தத் திருவுருவத்தையே அங்கே காணவில்லை. அதுபோன்ற ஒன்றைக் கண்டார். ஒருவன் விதை விதைத்து ஆலமரத்தைக் கண்டான். அந்த ஆலமரத்தில் மீட்டும் விதையைக் கண்டான் என்று. சொல்வது பொருத்தமாக இருக்கிறது. நமக்கு விளங்கு கிறது. பூமியில் விதைத்த விதை வேறு. அதிலிருந்து வளர்ந்த விதை வேறு. இரண்டும் ஆலம் விதைதான். ஆல்ை அது இது ஆகாது. ஆறு முகமும், பன்னிரண்டு. தோளும் உடைய ஆண்டவனே ஒவ்வொரு நாளும் திருக் கோயிலில் தரிசனம் செய்து உள்ளத்தில் பதித்துக்கொண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/80&oldid=575891" இலிருந்து மீள்விக்கப்பட்டது