பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தமிழகக் குறுநில வேந்தர்

ஒன்பது கொடி கூறி அவ் வொன்பதின்மருக்கும் அப்படைவருக்கும் தலைவராகத் துரோணரை ஸேநாபதியாக அபிஷேகஞ் செய்தது கேட்கப்படுதலின் அதற்கியைய இப் பெயரைச் சிறப்பாகக் கொண்டனரோ என வூகிக்கவுமிடனுண்டு. இவ்வொன்பது கொடியும்,

1. அசுவத்தாமன் சிங்கவாற்கொடி.
2. கண்ணன் யானைக் கச்சைக் கொடி.
3. விருஷசேனன் மயிற் கொடி.
4. கிருபர் (அசுவத்தாமாவின் மாமன்) எருத்துக்கொடி
5. சல்லியன் கலப்பைக் கொடி.
6. பூரிச்ரவஸு யூபக் கொடி.
7. ஸிந்துராஜன் பன்றிக் கொடி.
8. சலன் யானைக் கொடி.
9. துரியோதனன் அரவக் கொடி.

என இவையாம். இதை விரிப்பிற் பெருகும்.