பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா.கோவிந்தனார்

163

படித்து "வாலி வழக்கு என்பது போலும் அரிய நூல் களைப்படைத்த அமரர் திரு புரிசை முருகேச முதலியார் போன்றவர்கள் பானு கவியாரின் மாணவர்கள், அவர்கள் உருவாக்கியது அச்சங்கம். அதிலும் நான் பங்குகொண்ட வன் தான்; ஆண்டுதோறும் திருவத்திபுரத்திற்கு வந்து செல்லும் ஞானியார் அலர்கள் அயர்ந்து உறங்கத் தொடங்கும்போது, அவர் உறங்கும் வரை அவர் கால் களைப் பிடித்துவிடும் பழக்கமுடைய என்னை, ஒருமுறை அவர் தலைமையில் "மணிவாசகர் அளித்த இரு வாசகம் என்ற தலைப்பில் பேசுமாறு பணித்துவிட்டார்கள். சங்க இலக்கியங்களை ஓரளவு கற்றவனே அல்லது, சமய இலக்கியம் படித்தவன் அல்லன். ஆனாலும் திருக்கோவை யாரில் ஒரு சில பாக்களைப் பள்ளியில் படித்தவன்.

என் தந்தையார் மார்கழி மாத விடியற் போதில் படிக்கும் திருவாசகப் பாக்களைக் கேட்டுக் கேட்டுச் சில பாடல்களை நினைவில் வைத்திருப்பவன். அதனால் தன் மகள் அவள் விரும்பும்' இளைஞனோடு அவனூர் சென்று விட்ட போது, அவர்களைத் தேடிச் சென்ற தாய், எதிரே வந்த ஓர் இள ஆணையும் ஓர் இள மகளையும் அணுகி, உங்களைப் போன்ற இருவர் இவ்வழியில் செல்வதைக் கண்டீர்களா எனக்கேட்க, அதற்கு அந்த இளைஞன், ஒன்று இருவரையும் பார்த்தேன் அல்லது இல்லை எனக் கூறியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக "என்னைப் போன்ற இளைஞனைப் பார்த்தேன்" எனக் கூறி விட்டுத் தன் பக்கத்தில் நிற்கும் தன் காதலியைப் பார்த்து, "இந்த அம்மா, வேறு யாரோ ஒருவரைப் பற்றி கேட்கிறார்களே! அவர்களைப்பற்றி உனக்குத் தெரியுமா?" எனக் கேட்ட தாக வரும்,

ஆளி அன்னானைக் கண்டேன், அயலே தூண்டா
விளக்கனையாய்? என்னையோ அன்னை சொல்லியதே"