பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

தமிழக வரலாறு.கரிகாற் பெருவளத்தான்

சற்றேறக்குறைய கி.மு. நான்காம் நூற்றாண்டு அளவில் இந்நூல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளார். அறிஞர்கள்

ஒரே நூலில், தொல்காப்பியர் காலம் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய ஆய்வாளர்களிடையே கூட ஒத்த கருத்து இல்லை என்பது வருந்தத்தக்க ஒன்றாம். மேலும், திருவாளர். பி.டி.சீனிவாச அய்யங்கார் அவர்கள், "தமிழர் வரலாறு' (History of the Tamils) என்ற தம்முடைய ஆங்கில நூலில், Agathiyanar Could not have lived before the I century B C., when Tamil writing must have begun to be commonly used. A study of the Tolkappiyam Compels us to believe, that master and pupil must have lived, a century or more later" எனக் தொல்காப்பியர் காலம், கி.மு. முதல் நூற் எனக் கொண்டுள்ளார். இது ஆராயப்பட்டிருக்க வேண்டாமா என்பதை ஆய்வாளர்கள் சிந்திக்க வேண்டும் திரு.பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்களின் "History of the Tamils" என்ற நூலின், என் தமிழ் மொழி பெயர்ப்பான, தமிழர் வரலாறு" முதல் பகுதியில், தொல்காப்பியர் காலம் குறித்து நான் கொடுத்திருக்கும் பின் வரும் வீளக்கம் 10 பற்றி வரலாற்று ஆய்வாளர்கள், அருள்கூர்ந்து. தங்கள் கருத்தினைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

"தமிழர் வரலாறு" (Hisory of the Tamils) என்ற நூலின் ஆசிரியர், திருவாளர் பி.டி.சீனிவாச அய்யங்கார், அழிந்தன போக, அழியாதுள்ள தமிழ் நூல்களில் நனி 'மிகப் பழமையானது, தொல்காப்பியர் இயற்றிய தொல் காப்பியம். அது பெரும்பாலும், கி. பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்காது11 என ளிடத்தில் கூறினாலும், பிறிதோரிடத் தமிழ் நூல்கள் பரவலாக எழுதப்பட்ட கி.மு. முத