பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இயல் 5

பொன்னன் ஒப்புக்கொண்டான்


புல்லினை மடிக்கும் தென்றல்;
பொன்நிறம் மாலை சிந்த,
நல்லபாம் பெனநெ ளிந்து
நழுவிடும் ஓடை; கூழாங்
கல்லிடைச் சலச லக்கும் ;
காக்கைகள் கூட்ட மாக
மெல்லுடல் கோதி நீரில்
விளையாடி உடல்கு ளிக்கும் !47

சிரித்திடும் ஆம்பல்; சோங்கிச்
சிணுங்கிடும் முளரி ; நாரை
விரித்தொரு சிறகை நீட்டிச்
சோம்பலை முறிக்கும் ; மீன்கள்
கருத்தினை இழந்து வானைக்
கடலென்று பாயும் ; தென்னங்
குருத்தோலை படப டக்கும் ;
குலுக்கெனச் சிரிக்கும் கிள்ளை!48

‌‌

19