பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"கட்டாயப் படுத்திப் பெண்ணைக்
கடிமணம் செய்து வைக்கும்
கெட்டதைத் தடுத்தல் மிக்க
கெடுதலோ? கொள்ளி கொண்டு
சுட்டாலும் அஞ்சேல்! ஏலாச்
சொல்லெலாம் பறக்கக் காற்றில்
விட்டிடு; பெண்வி ழித்தால்
விடுதலை நிலைக்கும் நாட்டில்!” 58

என்றனள். பொன்னன், "உன்றன்
இச்சைபோல் ஆகும்!" என்றான்.
குன்றினில் மறைந்து மேல்வான்
கொளுத்தினான் பரிதி! பொன்னன்,
"சென்று நான் வரவோ?" என்றான்.
தமிழச்சி சிரித்தாள். கண்கள்
ஒன்றினை ஒன்று விட்டுப்
பிரியாது தவித்து நின்றார்! 59


3

23