பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இயல் 8

பொன்னன்மேல் பழி

கொற்கைமுன் குளித்த முத்தை
இலைத்தட்டில் கொட்டி ஏந்திச்
சுற்றிலும் உள்ள தென்னை
மரங்களைத் தவளை கூவி
விற்றிடும் ; தாம ரைப்பூ
விலைபேசும்; குடிதண் ணீர்க்குச்
சுற்றுவட் டார மெல்லாம்
பேர்போன குளத்தில்,காலை-80


குடத்தினை இடையில் சேர்த்துக்
குடிதண்ணிர் மொள்ளப் பெண்கள்
நடக்கின்றார் வலக்கை வீசி ;
நல்லிசை சிலம்பு மீட்டும் ;
படித்துறை எங்கும் வட்ட
மதிக்கூட்டம் ; பசுங்கிள் ளைகள்
அடங்கிடும் இன்சொல் கேட்க !
உலகினில் அடங்கார் யாரே ?81

32