பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குப்பனும் சிறுவ னோடு
குறும்பாகப் பேசிப், பின்னர்,
"எப்படி மூலை வீட்டுப்
பாப்பாத்தி இருக்கின் றாள்?"என்(று)
ஒப்புக்குக் கேட்பான் போல
உளவாகக் கேட்டான். பையன்
செப்பினான் யாவும். குப்பன்
திகைத்தொரு கட்டை யானான்!

99