பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 12

ஊர் மன்றத்தின் தீர்ப்பு

"குப்பனே கொலைஞன் !" என்று
தமிழச்சி கூச்ச லிட்டாள் ;
"குப்பனே கொலைஞன் !" என்று
பாப்பாத்தி குறைஇ ரந்தாள்;
"தப்(பு)"என்றார் ஊர்நாட் டாண்மை;
"சான்(று)உண்டோ உங்கட்(கு)?" என்றார்; செப்பினர்,"சான்(று)எங் கட்குத்
தெய்வமே!"என்(று)அப் பெண்கள்!117

குப்பனை ஊர்நாட் டாண்மை
கூப்பிட்டார்;"நீயே என்று
செப்புகின் றார்கள் இந்தத்
தெளிவிலா இரண்டு பெண்ணும்;
ஒப்புக்கொள் கின்றா யாநீ?
உன்மீது சாற்றப் பெற்ற
தப்பினை விலக்கச் சான்று
யாரேனும் உண்டா?" என்றார்.118

47